பதிவு செய்த நாள்
26 டிச2020
21:34
புதுடில்லி:ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான, பொருளாதார மற்றும் வர்த்தக
ஒத்துழைப்புக்காக அமைக்கப்பட்ட, ஐரோப்பிய ஒன்றியத்தில், 28 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த கூட்டமைப்பில் இருந்து, வரும், 31ம் தேதி இரவில் இருந்து, பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக வெளியேறுகிறது. இதை,‘பிரெக்சிட்’ என அழைக்கின்றனர்.
இந்நிலையில்,இந்தியா, இந்த இரு அமைப்புகளுடனும், தனித் தனியாக, சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என, வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துஉள்ளனர்.இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டன் ஆகியவற்றுக்கு
இடையேயான ஒப்பந்தத்தின் மூலம், இந்தியாவுக்கு கிடைக்கும் லாபத்தை, இப்போதே
மதிப்பிடுவது என்பது சரியாக இருக்காது.
மேலும், இந்த ஒப்பந்தத்தினால், இந்திய பொருட்களுக்கு, இப்போது இருப்பதை விட அதிக நன்மை கிடைக்காது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியம் -பிரிட்டன் ஆகியவற்றுக்கிடையேயான ஒப்பந்தம், சேவைகள் துறையை உள்ளடக்காததால், இந்த இரு சந்தைகளிலும், தகவல் தொழில்நுட்பம். கட்டடக்கலை, ஆராய்ச்சி மற்றும்
மேம்பாடு மற்றும் பொறியியல் போன்ற சேவைத் துறைகளில் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்த இந்தியா முன்வரவேண்டும்.
இந்தியாவுக்கு போட்டியாக இருக்கும், வியட்னாம் போன்ற நாடுகளுக்கு, ஆடை மற்றும் கடல் பொருட்கள் பிரிவில், அதிக வரி அனுகூலம் இருக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|