பதிவு செய்த நாள்
26 டிச2020
21:40
புதுடில்லி:அமெரிக்காவை சேர்ந்த, மின்சார வாகன நிறுவனமான,‘டெஸ்லா’ வின் தயாரிப்பு, அடுத்த ஆண்டு, ஜூன் மாதத்தில் இந்தியாவுக்கு வருகிறது.
கடந்த அக்டோபரில், இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், இணை
நிறுவனருமான எலான் மஸ்க், டெஸ்லா இந்தியாவுக்கு வர இருப்பதை, டுவிட்டர் தகவல் மூலம் உறுதி செய்திருந்தார்.இப்போது, அடுத்த மாதம் முன்பதிவுகளை மீண்டும் துவங்கு
வதற்கான திட்டத்தை இந்நிறுவனம் வைத்துஇருப்பதாக தெரியவந்துஉள்ளது.
அடுத்த மாதம் முன்பதிவை துவக்கி, ஜூன் மாதத்தில் வினியோகத்தைத் துவங்க
திட்டமிட்டு உள்ளது.இதற்கு முன், கடந்த 2016ல், இந்தியாவுக்கான முன்பதிவை இந்நிறுவனம் அறிவித்தது நினைவிருக்க கூடும். முதலில், ‘மாடல் 3’ செடான் காரை அறிமுகம் செய்ய
திட்டமிட்டிருந்தது, டெஸ்லா நிறுவனம்.இந்த காரின் விலை, 55 லட்சத்திலிருந்து, 60 லட்சம் ரூபாய் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த, 2016ல், இந்த காருக்கான முன்பதிவு அறிவிக்கப்பட்ட போது,‘பேடிஎம்’ நிறுவனர்
விஜய் சேகர் ஷர்மா உள்ளிட்ட பல பிரபலங்கள் முன்பதிவு செய்தனர்.‘டெஸ்லா மாடல்
3’ கார், 2017ல் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது மிக அதிகம் விற்பனை ஆகும் மின்சார கார் இதுவாகும்.இந்த கார் முழுமையாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு, இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும். 15 நிமிடங்களில், இந்த காருக்கான சார்ஜை முழுமையாக
ஏற்றிக்கொள்ள இயலும் என்பது கூடுதல் சிறப்பு.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|