பதிவு செய்த நாள்
26 டிச2020
21:42
புதுடில்லி:பிராங்ளின் டெம்பிள்டன் நிறுவனம், அதன், ஆறு மியூச்சுவல் பண்டு திட்டங்களை நிறுத்துவது குறித்து, முதலீட்டாளர்களிடம் மின்னணு முறையில் வாக்கெடுப்பு நடத்துகிறது.
இந்நிலையில், இந்த வாக்கெடுப்புக்கான பார்வையாளராக, தருவை சுப்பையா
கிருஷ்ணமூர்த்தியை, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான,‘செபி’ நியமித்திருப்பதாக அறிவித்துள்ளது.இந்த வாக்கெடுப்பு, வரும் 29ம் வரை நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.கடந்த ஏப்ரல் 23ம் தேதி, பிராங்ளின் டெம்பிள்டன் மியூச்சுவல் பண்டு நிறுவனம், அதன் ஆறு மியூச்சுவல் பண்டு திட்டங்களை நிறுத்துவதாக, திடீரென அறிவித்தது.
இதையடுத்து, இவ்விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றம், முதலீட்டாளர்களிடம்
வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது.அத்துடன், வாக்கெடுப்பின்போது, செபி, ஒரு
பார்வையாளரை நியமிக்கு மாறும் உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாகவே,செபி, பார்வையாளரை அறிவித்துள்ளது.இந்த மின்னணு மூலமான வாக்கெடுப்பு நடைபெற்று முடிந்த பின், அதன் முடிவுகள் அறிவிக்கப்பட மாட்டாது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, முடிவுகள், மூடி சீல் வைக்கப்பட்ட உறையில்,
பார்வையாளரின் அறிக்கையுடன்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|