பதிவு செய்த நாள்
29 டிச2020
11:34
மும்பை: நேற்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில், இரண்டு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. முதலாவதாக, மும்பை பங்குச் சந்தையின்,'சென்செக்ஸ்' குறியீடு, முதன் முறையாக, 47 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டியது.
இரண்டாவதாக, 'டி.சி.எஸ்., எனும், 'டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்' நிறுவனத்தின் பங்குகள், இதுவரை இல்லாத வகையில், விலை அதிகரிப்பை கண்டன. அத்துடன், இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பும், முதன் முறையாக , 11 லட்சம் கோடி ரூபாயை தாண்டியது. இந்நிறுவனத்தின் பங்குகள், கடந்த நான்கு நாட்களில் மட்டும், 4 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்த மாதத்தில் மட்டுமே, 9.36 சதவீதம் அளவுக்கு அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது
.இது குறித்து, டாடா சன்ஸ் நிறுவன தலைவரும், டி.சி.எஸ்., நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான சந்திரசேகரன், ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில், நன்றி தெரிவித்திருப்பதுடன், புதுப்பித்துக் கொள்வதற்கான வாய்ப்பு வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நேற்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் குறியீடு மட்டுமின்றி; தேசிய பங்குச் சந்தையின் நிப்டி குறியீடும் சாதனை உயரத்தை தொட்டன.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|