வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ... நலவாரியம் கோரும்  குறுந்தொழில் முனைவோர் நலவாரியம் கோரும் குறுந்தொழில் முனைவோர் ...
ஜனவரி முதல் 'டிவி' விலை அதிகரிக்கிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 டிச
2020
11:37

புதுடில்லி: ஜனவரியிலிருந்து, 'டிவி' மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் விலை, 10 சதவீதம் அளவுக்கு அதிகரிக்க உள்ளது.

மூலப் பொருட்களான செம்பு, அலுமினியம், உருக்கு போன்ற பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் சரக்கு போக்குவரத்துக்கான கட்டண உயர்வு ஆகிய காரணங்களால், எல்.இ.டி., டிவி, ப்ரிஜ், வாஷிங் மிஷின் உள்ளிட்ட பொருட்களின் விலை, ஜனவரி மாதத்திலிருந்து அதிகரிக்க உள்ளது. இவற்றின் விலை கிட்டத்தட்ட, 10 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, டிவி பேனல்கள் விலையும், 'சப்ளை' குறைவு காரணமாக, இரு மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், பிளாஸ்டிக்கின் விலையும் தற்போது அதிகரித்துள்ளது. இதனாலும், டிவி விலையை அதிகரிக்கும் முடிவுக்கு நிறுவனங்கள் வந்துள்ளன.எல்.ஜி., பானாசோனிக் மற்றும் தாம்சன் போன்ற நிறுவனங்கள், ஜனவரி முதல் விலையை அதிகரிக்க உள்ளன. இருப்பினும், சோனி இன்னும் நிலைமையை மறுபரிசீலனை செய்து வருகிறது. விலை உயர்வு குறித்து, இதுவரை இந்நிறுவனம் எதுவும் தெரிவிக்கவில்லை.

விலை உயர்வு குறித்து, பல நிறுவனங்களின் அதிகாரிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்:
மனிஷ் ஷர்மா, தலைமை செயல் அதிகாரி, பானாசோனிக் இந்தியா: மூலப் பொருட்களின் விலை உயர்வு, எங்கள் தயாரிப்புகளின் விலையையும் பாதிக்கிறது. எங்கள் தயாரிப்புகளின் விலை விரைவில், 6 - 7 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில், 10 - 11 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

விஜய் பாபு, துணைத் தலைவர், எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ்: நாங்கள் 7 - 8 சதவீதம் அளவுக்கு, டிவி, வாஷிங் மிஷின், ப்ரிஜ் என அனைத்து பொருட்களின் விலையையும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.

சுனில் நய்யார், நிர்வாக இயக்குனர், சோனி இந்தியா: நாங்கள் விலையை அதிகரிப்பது குறித்து, இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. தற்போதையை நிலையில், சிறிய திரை அளவைக் கொண்ட டிவிகளின் விலை, பெரிய சிக்கலில் தான் உள்ளது.அவற்றின் பேனல் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அதேபோல், பெரிய திரையளவு கொண்ட டிவிகளுக்கும் விலை அதிகரிப்பு இருப்பினும், அது பெரிய பிரச்னையாக இருக்காது.ஆனால், இந்தியா இன்னும், 32 அங்குல திரை அளவுக்கான சந்தையாகவே உள்ளது.இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, நிறுவனங்களின் விலையை அதிகரிக்கும் இந்த முடிவு, அடுத்த காலாண்டில், ஒட்டுமொத்த தேவையை பாதிப்பதாக அமையக்கூடும் என, நுகர்பொருள் மின்னணுவியல் மற்றும் சாதனங்கள் தயாரிப்பாளர்களின் கூட்டமைப்பான, சி.இ.ஏ.எம்.ஏ., எச்சரித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)