நலவாரியம் கோரும்  குறுந்தொழில் முனைவோர்நலவாரியம் கோரும் குறுந்தொழில் முனைவோர் ... நாளைக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் இரு மடங்கு அபராதம் நாளைக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் இரு மடங்கு அபராதம் ...
திணறும் தொழில் நிறுவனங்கள்: தொடரும் பணியாளர்கள் பற்றாக்குறை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 டிச
2020
13:24

கோவையில் மோட்டார் பம்ப் செட், கிரில், இன்ஜினியரிங், கிரைண்டர் தயாரிப்பு என, 5,000க்கும் அதிகமான சிறு, குறு தொழிலகங்களில், 2 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், 3 லட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.

தவிர, மில்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், பெரும்பாலும் வெளிமாநில தொழிலாளர்களின் பங்களிப்பு அதிகமாக இருந்து வருகிறது. இங்கு, காலை, இரவு என ‘ஷிப்ட்’ முறையிலும், கூடுதல் பணி நேரம் அடிப்படையிலும், பணிகள் முடிக்கப்படுகின்றன.கொரோனா காரணமாக, கோவையில் கட்டுமானம், தொழிற்கூடங்கள் என, பல்வேறு துறைகளில் பணிபுரிந்துவந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான வெளிமாநில தொழிலாளர்கள், அவரவர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு விட்டனர்.இவர்களில் பலர், மீண்டும் வேலைக்கு திரும்பாததால், உள்ளூர் தொழிலாளர்களை வைத்து வேலை வாங்கும் நிலை, கோவையில் மட்டுமின்றி, பனியன் உற்பத்திக்கு பெயர்பெற்ற திருப்பூர் உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் காணப்படுகிறது. தற்போது, இரும்பு உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலையேற்றம் தொழில்முனைவோருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. மறுபுறம் தொழிலாளர் பற்றாக்குறை வேறு.

இதுகுறித்து, தொழில்முனைவோர் கூறியதாவது:கொரோனா காரணமாக, ஆறு மாதங்களுக்கு மேலாக முடங்கிக்கிடந்த தொழில், தற்போது படிப்படியாக மீண்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், பணியாளர் பற்றாக்குறை என்பது மேலும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. பொருட்களை சரியான நேரத்தில் உற்பத்தி செய்து தரமுடியாததுடன், கூடுதல் சம்பளம் கேட்கும் பணியாளர்கள் அதிகரித்து வருகின்றனர்.


கோவை ‘ஜாப் ஆர்டர்’கள் செய்துகொடுக்கும் சிறு, குறு தொழில்கள் நிறைந்த மாவட்டமாக உள்ளது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள், ஜாப் ஆர்டர்களை மட்டுமே நம்பி தொழில்புரிந்து வருகின்றனர். இவர்களுக்கு குறைந்த அளவில் தான் மணி நேரத்துக்கு (ஹவர்) ஏற்ப சம்பளம் வழங்கும் நிலை தற்போது உள்ளது.ஊதியம் போதுமான அளவுக்கு வழங்க முடியாததால், ஆட்கள் வருகையும் குறைந்து வருகிறது. எனவே, ஜாப் ஆர்டர்கள் செய்யும் தொழில்முனைவோரை பாதுகாக்க, ஏற்கனவே வழங்கிவரும் தொகையில் இருந்து மணி நேரத்துக்கு, உற்பத்தி சார்ந்த நிறுவனங்களும், பெரிய நிறுவனங்களும், 50 சதவீதம் சேர்த்து வழங்கினால் உதவியாக இருக்கும்.மேலும், பணியாளர் பற்றாக்குறையால், ஜாப் ஆர்டர்களை குறித்த நேரத்தில் முடித்து தரும் ‘ஷிப்ட்’ முறை பாதிக்கப்படுகிறது. காலை, இரவு என்பது, தற்போது ஒரு ஷிப்ட் தான் பணிபுரிய ஆட்கள் இருக்கின்றனர்.

அதேபோல், உள்ளூர் பணியாளர்கள் அதிக சம்பளம் கேட்பதால் தொழில் நடத்துவது சிரமமாக உள்ளது.பணியாளர் பற்றாக்குறைக்கு தீர்வுகாண, மாவட்டங்கள்தோறும் பயிற்சி மையங்களை அரசு நிறுவி வேலை வாய்ப்பற்றவர்களுக்கு தனி பயிற்சி அளிக்க வேண்டும். இதன் வாயிலாக, இக்கட்டான சமயங்களில் பணியாளர்களை பெறமுடியும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)