பதிவு செய்த நாள்
29 டிச2020
21:43
புதுடில்லி:இந்திய பொருளாதாரம், நீண்ட காலத்தில், எத்தகைய நெருக்கடிகளையும்
சந்திக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என, ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளின் அன்னிய நேரடி முதலீட்டு போக்குகள் மற்றும்
கண்ணோட்டம் குறித்த,‘யுனெஸ்காப்’ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியா பகுதியில், நீண்ட காலத்தில், எத்தகைய பொருளாதார
நெருக்கடிகளையும் சந்திக்கும் திறன் கொண்டதாக, இந்திய பொருளாதாரம் இருக்கும்.
இந்த பகுதியில், அன்னிய நேரடி முதலீட்டில், கிட்டத்தட்ட, 77 சதவீதம், இந்தியாவில்
மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்தியாவில், 2025ம் ஆண்டு வாக்கில், தகவல் தொழில்நுட்பம்,
தகவல் தொடர்பு சேவைகள், மின்னணு உற்பத்தி போன்ற முக்கிய டிஜிட்டல் துறைகள், இரு மடங்கு வளர்ச்சியைக் காணும்.
கொரோனா தொற்று காரணமாக, விவசாயத் துறை உள்ளிட்டவற்றில், டிஜிட்டல் பயன்பாடு அதிகரிக்கும் வாய்ப்பிருக்கிறது.கடந்த, 2019ம் ஆண்டிலிருந்து, தொடர்ந்து குறிப்பிடத்தக்க முதலீட்டு கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|