பதிவு செய்த நாள்
29 டிச2020
21:45
மும்பை:எச்.டி.எப்.சி., வங்கியின் பகுதி நேரத் தலைவர் ஷியாமளா கோபிநாத்தின் பதவிக் காலம், ஜனவரி முதல் தேதியுடன் முடிவடைய இருப்பதால், புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என தெரிகிறது.
கடந்த அக்டோபரில், இவ்வங்கியின் நிர்வாக இயக்குனர் ஆதித்யா பூரி பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். இவரை அடுத்து, சஷிதர் ஜெகதீஷன் நியமிக்கப்பட்டார்.இந்நிலையில், இவ்
வங்கியின் பகுதி நேரத் தலைவராக இருக்கும், ஷியாமளா கோபிநாத்தின் பதவிக்காலம், ஜனவரி முதல் தேதியுடன் முடிவடைகிறது.
ஷியாமளா கோபிநாத் இதற்கு முன், ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக பணியாற்றியவர்.
கடந்த திங்களன்று கூடிய வங்கியின் நிர்வாக குழு கூட்டத்தில், பகுதி நேர தலைவர் பதவிக்கு புதிதாக ஒருவரை நியமிப்பது குறித்து பரிந்துரை செய்யப்பட்டது.மேலும், இது குறித்து, ரிசர்வ் வங்கியின் அனுமதிக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
பொருளாதார விவகார துறையின் முன்னாள் செயலாளர், அதானு சக்ர வர்த்தி, எச்.டி.எஃப்.சி
வங்கியின் அடுத்த தலைவராக இருக்க வாய்ப்புள்ளது என, வங்கித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|