பதிவு செய்த நாள்
30 டிச2020
21:37
புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டில், 21.46 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என, இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பான, எப்.ஐ.இ.ஓ., தெரிவித்து உள்ளது.
இது குறித்து, இவ்வமைப்பின் தலைவர் ஷரத் குமார் சராப் கூறியதாவது:நடப்பு ஆண்டின் முதல் பாதியில், கொரோனாவால் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.உலக
வர்த்தகத்தில், ஆங்கில எழுத்தான, ‘வி’ வடிவத்தில் மீட்சி ஏற்படும் என, நாங்கள்
கருதுகிறோம். 2020ம் ஆண்டில் நாம் இழந்த பலவற்றை, புதிய ஆண்டில் மீட்டெடுப்போம்
என நம்புகிறோம்.
முதலாம் மற்றும் இரண்டாம் காலாண்டு மிகவும் மோசமாக இருந்ததால், நடப்பு
நிதியாண்டில் ஏற்றுமதி, 21.46 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் எனக் கருதுகிறோம்.இருப்பினும், பதப்படுத்தப்பட்ட உணவு, மருந்து, மருத்துவ சாதனங்கள், தொழில்நுட்ப ஜவுளி, ரசாயனம், பிளாஸ்டிக், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்டவற்றுக்கு நல்ல, ‘ஆர்டர்’ முன்பதிவு
உள்ளது.இந்த நிலையைப் பார்க்கும்போது, 2021- – 22ம் ஆண்டில் ஏற்றுமதி, 25.90 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|