அடுத்த நிதியாண்டில் ஏற்றுமதி அதிகரிக்கும்அடுத்த நிதியாண்டில் ஏற்றுமதி அதிகரிக்கும் ... புத்தாண்டு கொண்டாட்டம் ஓட்டல் துறை கவலை புத்தாண்டு கொண்டாட்டம் ஓட்டல் துறை கவலை ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வங்கி மோசடிகள் குறைந்துள்ளன: ரிசர்வ் வங்கியின் அறிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 டிச
2020
21:39

மும்பை:நாட்­டில், வங்கி மோச­டி­கள் மிக­வும் குறைந்­தி­ருப்­ப­தாக, ரிசர்வ் வங்கி
தெரி­வித்­துள்­ளது.

நடப்பு நிதி­யாண்­டில், ஏப்­ரல் முதல் செப்­டம்­பர் வரை­யி­லான, முதல் ஆறு மாதங்­களில், வங்கி மோச­டி­கள் குறிப்­பி­டத்­தக்க அள­வில் குறைந்­துள்­ள­தாக, ரிசர்வ் வங்கி கூறி­யுள்­ளது. மேலும், பொதுத் துறையை விட, தனி­யார் துறை வங்­கி­களில் மோச­டி­கள் அதி­க­ரித்­தி­ருப்­ப­தா­க­வும் தெரி­வித்­துள்­ளது.

இது குறித்து, ரிசர்வ் வங்கி அறிக்­கை­யில் மேலும் தெரி­விக்­கப்­பட்டு உள்­ள­தா­வது: கடந்த
ஏப்­ரல் முதல் செப்­டம்­பர் வரை­யி­லான ஆறு மாதங்­களில், கிட்டத்­தட்ட, 64 ஆயி­ரத்து, 681 கோடி ரூபாய் அள­வி­லான மோச­டி­கள் நடை­பெற்­றி­ருப்­ப­தாக பதி­வாகி உள்ளன.கடந்த
நிதி­யாண்­டில் முதல் ஆறு மாதங்­களில், 1.13 லட்­சம் கோடி ரூபாய்க்­கும் அதி­க­மாக மோச­டி­கள் நடை­பெற்­று உள்ளன.

முந்­தைய நிதி­யாண்­டில், தாம­த­மா­கக் கண்­ட­றிந்­த­தன் கார­ண­மாக, வங்கி மோச­டி­கள் இரண்டு மடங்­கிற்­கும் மேலாக உயர்ந்­தன.தற்­போ­தைய மோச­டி­ களில் கிட்­டத்­தட்ட, 98 சத­வீத மோச­டி­கள், கடன் தொடர்­பு­டை­ய­தாக உள்ளன. இந்த கடன்­களில் பல, முந்­தைய
ஆண்­டு­க­ளி­லி­ருந்து தொடர்ந்து வரு­பவை.உதா­ர­ண­மாக, கடந்த செப்­டம்­பர் வரை­யி­லான காலத்­தில் அறி­விக்­கப்­பட்ட மோச­டி­களில் பெரும்­பா­லா­னவை, 2017 – 18ம் ஆண்­டுக்கு
முந்­தை­ய­தா­கும்.


மோசடி நிகழ்ந்த தேதியின் அடிப்­ப­டை­யில் பார்த்­தால், நடப்பு ஆண்­டில் ஏப்­ரல் முதல் செப்டம்பர் வரை­யி­லான காலத்­தில், 1,182 மோசடிகள் பதி­வாகி உள்ளன.இதுவே, 2019ம் ஆண்டில் இதே காலத்­தில், 21 ஆயி­ரத்து, 990 ஆக இருந்தது.ஏப்­ரல் முதல் செப்­டம்­பர்
வரை­யி­லான காலத்­தில் நடை­பெற்ற அனைத்து வங்கி மோச­டி­களில், பொதுத் துறை
வங்­கி­களின் பங்கு, 73.93 சத­வீ­த­மாக உள்­ளது. இருப்­பி­னும் இது, கடந்த நிதி­யாண்­டு­டன்
ஒப்­பி­டும்­போது குறைந்­துள்­ளது.

ஆனால், தனி­யார் வங்கி­களில் மோச­டி­கள் அதி­க­ரித்­துள்ளன. மொத்த வங்கி மோச­டி­களில், தனி­யார் நிறு­வ­னங்­களின் பங்கு, 24.05 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துள்­ளது.இது, கடந்த நிதி­யாண்டில், இதே காலத்­தில், 18.4 சத­வீ­த­மாக குறைந்­தி­ருந்­தது.இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)