பதிவு செய்த நாள்
30 டிச2020
21:39
மும்பை:நாட்டில், வங்கி மோசடிகள் மிகவும் குறைந்திருப்பதாக, ரிசர்வ் வங்கி
தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான, முதல் ஆறு மாதங்களில், வங்கி மோசடிகள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக, ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. மேலும், பொதுத் துறையை விட, தனியார் துறை வங்கிகளில் மோசடிகள் அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இது குறித்து, ரிசர்வ் வங்கி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: கடந்த
ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களில், கிட்டத்தட்ட, 64 ஆயிரத்து, 681 கோடி ரூபாய் அளவிலான மோசடிகள் நடைபெற்றிருப்பதாக பதிவாகி உள்ளன.கடந்த
நிதியாண்டில் முதல் ஆறு மாதங்களில், 1.13 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடிகள் நடைபெற்று உள்ளன.
முந்தைய நிதியாண்டில், தாமதமாகக் கண்டறிந்ததன் காரணமாக, வங்கி மோசடிகள் இரண்டு மடங்கிற்கும் மேலாக உயர்ந்தன.தற்போதைய மோசடி களில் கிட்டத்தட்ட, 98 சதவீத மோசடிகள், கடன் தொடர்புடையதாக உள்ளன. இந்த கடன்களில் பல, முந்தைய
ஆண்டுகளிலிருந்து தொடர்ந்து வருபவை.உதாரணமாக, கடந்த செப்டம்பர் வரையிலான காலத்தில் அறிவிக்கப்பட்ட மோசடிகளில் பெரும்பாலானவை, 2017 – 18ம் ஆண்டுக்கு
முந்தையதாகும்.
மோசடி நிகழ்ந்த தேதியின் அடிப்படையில் பார்த்தால், நடப்பு ஆண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், 1,182 மோசடிகள் பதிவாகி உள்ளன.இதுவே, 2019ம் ஆண்டில் இதே காலத்தில், 21 ஆயிரத்து, 990 ஆக இருந்தது.ஏப்ரல் முதல் செப்டம்பர்
வரையிலான காலத்தில் நடைபெற்ற அனைத்து வங்கி மோசடிகளில், பொதுத் துறை
வங்கிகளின் பங்கு, 73.93 சதவீதமாக உள்ளது. இருப்பினும் இது, கடந்த நிதியாண்டுடன்
ஒப்பிடும்போது குறைந்துள்ளது.
ஆனால், தனியார் வங்கிகளில் மோசடிகள் அதிகரித்துள்ளன. மொத்த வங்கி மோசடிகளில், தனியார் நிறுவனங்களின் பங்கு, 24.05 சதவீதமாக அதிகரித்துள்ளது.இது, கடந்த நிதியாண்டில், இதே காலத்தில், 18.4 சதவீதமாக குறைந்திருந்தது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|