பதிவு செய்த நாள்
30 டிச2020
21:41
புதுடில்லி:நாளை, புத்தாண்டு பிறக்கும் நிலையில், அதை கொண்டாடும் வகையில், மக்களிடம் என்ன திட்டங்கள் உள்ளன என்பது குறித்து, ஆய்வு ஒன்றை மேற்கொண்டது, விருந்தோம்பல் துறை குறித்த ஆலோசனை நிறுவனமான, ‘அவிக்னா சொலுஷன்ஸ்!’
ஆய்வில் தெரிய வந்துள்ளதாவது:ஆய்வில் பங்கேற்றவர்களில், 65 சதவீதத்துக்கும்
அதிகமானோர், உணவு மற்றும் மதுபானங்களை, ‘ஆன்லைனில்’ ஆர்டர் செய்துவிடும் முடிவில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.மேலும், 50 சதவீதம் பேர், கொரோனா பரவலை முன்னிட்டு, வீட்டிலேயே இருந்து விடுவது என்ற முடிவில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
கிட்டத்தட்ட, 10 சதவீதம் பேர் மட்டுமே, ஓட்டல் அல்லது உணவகங்களுக்கு செல்லும்
எண்ணத்தில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.இது போன்ற முடிவுகள் காரணமாக,
விருந்தோம்பல் துறையினர் கவலையில் உள்ளனர். டில்லி தலைநகர் பிராந்தியத்தில்,
புத்தாண்டு இரவில் மட்டும், 200 – 250 கோடி ரூபாய் வணிக இழப்பு ஏற்படும் என
கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|