பதிவு செய்த நாள்
30 டிச2020
21:42
புதுடில்லி:ஆடம்பர கார்கள் விற்பனை, நடப்பு ஆண்டில் கடுமையான வீழ்ச்சியை
சந்தித்துள்ளதாக, பல கார் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஊரடங்கு
தளர்வுகளுக்கு பின், அக்டோபரிலிருந்து தேவை அதிகரித்து வந்தாலும், வளர்ச்சி வாய்ப்பு குறித்து, சற்று எச்சரிக்கையுடனே இந்த நிறுவனங்கள் இருக்கின்றன.
நடப்பு ஆண்டில், ஆடம்பர கார்களின் விற்பனை கிட்டத்தட்ட, 40 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது. கடந்த, 2019ம் ஆண்டில், 34 – 35 ஆயிரம் ஆடம்பர கார்கள் விற்பனை ஆகியிருந்த நிலையில், நடப்பு ஆண்டில், 20 – 21 ஆயிரம் கார்கள்மட்டுமே விற்பனை ஆகியுள்ளன.
இருப்பினும், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, அக்டோபரில் இருந்து தேவை அதிகரித்து வருகிறது. இந்த தேவை அதிகரிப்பு, வரும் புத்தாண்டிலும் தொடரும் என, நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. தேவை அதிகரித்த போதும், அதை உடனடியாக
நிறைவேற்றக்கூடிய அளவுக்கு உற்பத்தி செய்ய முடியாத நிலையில் சில நிறுவனங்கள் உள்ளன.
பொருளாதார நிச்சயமற்ற தன்மை, அன்னிய செலாவணி விஷயங்களில் இருக்கும்
சவால்கள் ஆகியவை காரணமாக, இந்த நிறுவனங்கள், புதிய ஆண்டில் வளர்ச்சி வாய்ப்பு குறித்து, சற்று எச்சரிக்கையுடனே இருக்கின்றன.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|