பதிவு செய்த நாள்
30 டிச2020
21:43
புதுடில்லி:மெய்நிகர் நாணயமான, ‘பிட்காய்ன்’ விலை அதிகரித்து, புதிய சாதனையை
எட்டியுள்ளது. இதையடுத்து, 2019லிருந்து இதுவரையிலான காலத்தில், மிக அதிக லாபத்தை எட்டிய மாதமாக, டிசம்பர் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் மெய்நிகர் நாணயங்களில் மிகப் புகழ்பெற்ற, ‘பிட்காய்ன்’ விலை, நேற்றைய தினம், 20.36 லட்சம் ரூபாய் என்ற உயரத்தை எட்டியது. இதையடுத்து, இந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் இதுவரை, 47 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.
உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மத்தியில், இந்த ஆண்டு, பிட்காய்ன் மதிப்பு, கிட்டத்தட்ட நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. பிட்காய்ன் மட்டுமின்றி, ‘ஈதர்’
உள்ளிட்ட பிற நாணயங்களும் வளர்ச்சியை கண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|