பதிவு செய்த நாள்
31 டிச2020
21:51
புதுடில்லி:ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர் என்ற தகுதியை, முகேஷ் அம்பானி இழந்துஉள்ளார். முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி, அந்த இடத்துக்கு, சீனாவைச் சேர்ந்த தொழிலதிபரான, ஜாங் ஷான்ஷன் முன்னேறி இருக்கிறார்.
சீனாவைச் சேர்ந்த, ஜாங் ஷான்ஷன், பாட்டில் தண்ணீர் வணிகத்தில் முன்னணியில்
இருப்பவர்.மீடியாக்களில் அதிகம் அடிபடாத பெயர் இவருடையது. ஓராண்டுக்கு முன் வரை, சீனாவுக்கு வெளியே, பல பேருக்கு இப்படி ஒருவர் இருப்பதே தெரியாது.சீனாவின் மிகப் பெரிய நிறுவனங்களின் ஒன்றான,‘அலிபாபா’வின் நிறுவனர் ஜாக் மாவை விட பெரிய
பணக்காரர் ஆன போது தான், உலகம் இவரை உற்று கவனிக்கத்துவங்கியது.
இந்த ஆண்டில் இவரது சொத்து மதிப்பு, 5.76 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதையடுத்து, இவர், உலக பணக்காரர்கள் பட்டியலில், 11வது இடத்துக்கு அவர் முன்னேறி இருக்கிறார்.நடப்பு ஆண்டில் மட்டும் இவரது சொத்து மதிப்பு, 51 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இதையடுத்து, வரலாற்றில் மிக வேகமாக சொத்து மதிப்பு அதிகரித்த
நபர்களில் ஒருவராகவும் உயர்ந்துள்ளார், ஜாங் ஷான்ஷன்.
தற்போது, 66 வயதாகும் இவருக்கு, அரசியல் ஈடுபாடு கிடையாது. இவருடைய இந்த
உயர்வுக்கு, இரு வணிகங்கள் முக்கிய காரணமாக அமைந்துள்ளன.கடந்த ஏப்ரல் மாதத்தில் தடுப்பூசி மருந்து தயாரிப்பு நிறுவனமான, ‘பீஜிங் வான்டாய் பயோலாஜிக்கல் பார்மசி’
நிறுவனத்தை, பங்குச் சந்தையில் பட்டியலிடச் செய்தார். இந்த நிறுவனத்தின் பங்குகள் விலை, 2,000 சதவீதம் அதிகரித்துள்ளது.
அடுத்து, பாட்டில் தண்ணீர் வணிகமான, ‘நோங்பு ஸ்பிரிங்’ நிறுவனத்தை, ஹாங்காங்
சந்தையில் பட்டியலிட்டார். இதன் பங்கு விலை, 155 சதவீதம் அதிகரித்துள்ளது.இவற்றின் காரணமாக, இவரது சொத்து மதிப்பு இந்த அளவுக்குஅதிகரித்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|