பதிவு செய்த நாள்
31 டிச2020
21:59
புதுடில்லி:சிறு சேமிப்பு திட்டங்களில் பணத்தை முதலீடு செய்திருப்பவர்களுக்கு, ஒரு
மகிழ்ச்சியான செய்தி. இத்திட்டங்களில் வழங்கப்பட்டு வரும் வட்டி விகிதத்தில், எந்த
மாற்றமும் செய்யாமல் அப்படியே தொடர, அரசு முடிவு செய்துள்ளது.
சிறு சேமிப்பு திட்டங்களில் குறிப்பாக, தபால் அலுவலக திட்டங்கள், பொது ஷேம நல நிதி, தேசிய சேமிப்பு திட்டங்கள், சுகன்யா சம்ருதி யோஜனா உள்ளிட்ட திட்டங்களில்
வழங்கப்பட்டு வரும் வட்டி விகிதங்களில், மார்ச் 31ம் தேதி வரை எந்த மாற்றமும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது ஷேம நல நிதிக்கான வட்டி, 7.10 சதவீதமாகவும்; தேசிய சேமிப்பு திட்டத்தில்,
6.8 சதவீதமாகவும்; தபால் அலுவலக மாதாந்திரவருவாய் திட்டத்தில், 6.6 சதவீதமாகவும்
தொடரும்.இவ்வாறு நிதியமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|