பதிவு செய்த நாள்
01 ஜன2021
21:08
புதுடில்லி:கடந்த டிசம்பர் மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல், இதுவரை இல்லாத அளவுக்கு, 1.15 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.
பண்டிகை கால தேவை மற்றும் பொருளாதார செயல்பாடுகள் அதிகரிப்பு ஆகியவை
காரணமாக, இதுவரை இல்லாத அளவுக்கு, ஜி.எஸ்.டி., வசூல் ஆகியுள்ளது.இது குறித்து நிதியமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:கடந்த, 21 மாதங்களில் இல்லாத அளவுக்கு,
டிசம்பரில், ஜி.எஸ்.டி., வசூல் வருவாய் அதிகரித்துஉள்ளது.
இந்த மாதத்தில் மொத்தம், 1.15 லட்சம் கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. மேலும், தொடர்ந்து மூன்று மாதங்களாக, 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வசூலாகி வருகிறது.ஊரடங்கு
தளர்வுகளுக்கு பிறகான விரைவான பொருளாதார மீட்சி மற்றும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் எடுக்கப்பட்ட முயற்சி ஆகியவை
காரணமாக, வசூல் இந்த அளவுக்கு அதிகரித்துள்ளது.
டிசம்பரில், பொருட்கள் இறக்குமதி மூலமான வரி வருவாய், 27 சதவீதம் அதிகரித்துள்ளது.
மேலும், உள்நாட்டு பரிவர்த்தனையின் மூலமான வருவாய், 8 சதவீதம் அதிகரித்துள்ளது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|