பதிவு செய்த நாள்
01 ஜன2021
21:11
சென்னை:தமிழகத்தில், 2020ல் மட்டும், 1 சவரன் ஆபரண தங்கம் விலை, 7,928 ரூபாய்
அதிகரித்துள்ளது.
தமிழகத்தில், 2020 ஜன., 1ல், 22 காரட் ஆபரண தங்கம், 1 கிராம், 3,735 ரூபாய்க்கும்; சவரன், 29 ஆயிரத்து, 880 ரூபாய்க்கும் விற்பனையாகின. ஒரு கிராம் வெள்ளி, 50.30 ரூபாய்க்கு விற்கப்பட்டது.மார்ச் வரை, தங்கம் விலை அதிகம் உயரவில்லை. அம்மாதம், 23ல், சவரன், 31 ஆயிரத்து, 616 ரூபாய்க்கு விற்பனையானது.
கொரோனா தொற்று பரவலை தடுக்க, மார்ச், 24 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதையடுத்து, அனைத்து நகை கடைகளும் மூடப்பட்டன. வைரஸ் தொற்று பரவலால்,
பல நாடுகளில், தொழில் துறை பாதித்தது.இதனால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி,
தங்கத்தில், முதலீடு செய்ததால், அதன் விலைஅதிகரித்தது.
ஆக., 7ல், 1 கிராம் தங்கம், 5,416 ரூபாய்க்கும்; சவரன், 43 ஆயிரத்து, 328 ரூபாய்க்கும்
விற்பனையாகின.இதுவே, இதுவரை, தங்கம் விற்பனையில், அதிக விலை உயர்வாகும். பின், தங்கம் விலை குறைவதும், ஏறுவதுமாக இருந்தாலும், புதிய உச்சத்தை எட்டவில்லை.
நேற்று, 1 கிராம் தங்கம், 4,735 ரூபாய்க்கும்; சவரன், 37 ஆயிரத்து, 880 ரூபாய்க்கும்
விற்பனையாகின.
முந்தைய நாள் விலையுடன் ஒப்பிடும் போது, கிராமுக்கு, 9 ரூபாயும்; சவரனுக்கு, 72 ரூபாயும் அதிகரித்துள்ளது.ஓராண்டில் மட்டும், தங்கம் கிராமுக்கு, 991 ரூபாயும்; சவரனுக்கு, 7,928
ரூபாயும் அதிகரித்துஉள்ளன. வெள்ளி விலையும் கிராமுக்கு, 22.10 ரூபாய் அதிகரித்து, 72.40 ரூபாய்க்கு விற்பனைஆனது.
இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:கொரோனா தொற்று பாதிப்பிற்கு பின், தங்கத்தின் மீது முதலீடு என்பது, ஒரு பெரிய லாபம் தரக் கூடிய விஷயமாக நிரூபணம் ஆகியுள்ளது. மக்கள் மீண்டும் தங்கத்தில் முதலீடு செய்ய துவங்கியுள்ளதால், அதன் விலை உயர்ந்து வருகிறது. இதனால், முதலீட்டாளர்களுக்கும் அதிக லாபம் கிடைக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|