பதிவு செய்த நாள்
01 ஜன2021
21:13
புதுடில்லி:ரத்து செய்யப்பட்ட அல்லது வெற்றிகரமாக செயல்படுத்த முடியாமல் போன பணப் பரிவர்த்தனை தொகையை, மீண்டும் திருப்பிச் செலுத்துவதில் வங்கிகள் மிகவும் தாமதம் செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதையடுத்து, இது குறித்து தலையிட்டு பிரச்னையை சரிசெய்யுமாறு, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம், ரிசர்வ் வங்கியிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து, ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் எம்.கே.ஜெயினுக்கு, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர், நிதி கரே எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு உள்ள தாவது:ரத்து செய்யப்பட்ட அல்லது தோல்வியடைந்த பணப் பரிவர்த்தனைகளுக்கான தொகை திருப்பித் தரப்படவில்லை என, 2,850 புகார்கள் வந்துள்ளன.
தேசிய நுகர்வோர் உதவி மையத்துக்கு வரும் புகார்களில், இத்தகைய புகார்களின்
எண்ணிக்கை மட்டும், 20 சதவீதத்துக்கும் மேல் இருக்கிறது.மேலும், அப்படியே வங்கிகள் பணத்தை திருப்பி வழங்கினாலும், அவை ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின் அடிப்படையிலான குறிப்பிட்ட நாட்களுக்குள் வழங்கப்படுவதில்லை.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|