பதிவு செய்த நாள்
02 ஜன2021
22:56
புதுடில்லி:இந்தியாவில், மொபைல் போன் கட்டணத்தை ஆன்லைன் மூலமாக செலுத்துவது முதன் முறையாக, 50 சதவீதத்தை தாண்டியுள்ளது.மொபைல் ரீசார்ஜ் கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவே செலுத்தும் போக்கு தற்போது அதிகரித்து வருகிறது.
இது சமீபத்தில், 50 சதவீதத்தை தாண்டியுள்ளது. கொரோனா தாக்கம் காரணமாக, வெளியே கடைகளுக்கு சென்று ரீசார்ஜ் செய்யும் போக்கு குறைந்து, ஆன்லைன் மூலமாகவே செய்து கொள்வது அதிகரித்துள்ளது.கடந்த 2020 ஆண்டில், பாதிக்கு மேற்பட்ட ரீசார்ஜ் வருவாய், ஆன்லைன் மூலமாகவே வந்திருப்பதாக ஏர்டெல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் ஜியோவின் ரீசார்ஜ் வருவாய், மார்ச் காலாண்டில், 35 சதவீதமாக இருந்தது, டிசம்பர் காலாண்டில், 50 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஊரடங்கு காலத்தில், ஜூன் காலாண்டில் இது, 60 சதவீதம் வரை அதிகரித்திருந்தது.ரீசார்ஜ் கட்டணத்தை பொறுத்தவரை, பிரீபெய்டு திட்டத்தில் சராசரி கட்டணமான, 126 ரூபாய் ஆக தொடர்கிறது. போஸ்ட்பெய்டு கட்டணத்தை பொறுத்தவரை, 500 ரூபாய்க்கும் மேலாக செலுத்துவது அதிகரித்துள்ளது. காரணம் வீட்டிலிருந்து வேலை செய்வது அதிகரித்திருப்பது, இதற்கு ஒரு காரணமாக அமைந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|