பதிவு செய்த நாள்
02 ஜன2021
22:59
புதுடில்லி:பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், முகேஷ் அம்பானி ஆகியோருக்கு அபராதம் விதித்துஉள்ளது.
கடந்த, 2007ம் ஆண்டு, நவம்பரில், ரிலையன்ஸ் பெட்ரோலியம் பங்குகளில் தவறான முறையில் வர்த்தகம் செய்ததாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அதன் தலைவர் முகேஷ் அம்பானி, மற்றும் இரு நிறுவனங்களுக்கு அபராதம் விதித்துஉள்ளது, செபி.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு, 25 கோடி ரூபாயும்; முகேஷ் அம்பானிக்கு, 15 கோடி ரூபாயும்; நவி மும்பை சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனத்துக்கு, 20 கோடி ரூபாயும்; மும்பை சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனத்துக்கு, 10 கோடி ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்தின், 4.1 சதவீத பங்குகளை, மார்ச் 2007ல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் விற்பனை செய்வது என முடிவு செய்தது. இதையடுத்து, 2007 நவம்பரில், பங்குகள் விற்பனை செய்யப்பட்டது. 2009ல் ரிலையன்ஸ், பெட்ரோலியம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீயுடன் இணைக்கப்பட்டது. இதில், பங்குகள் விற்பனைக்கு பின்னால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இருப்பதை, பொதுமுதலீட்டாளர்கள் அறியவில்லை. இந்த நடவடிக்கை பங்குகள் விலையில் பாதிப்பை ஏற்படுத்தியது. இது, பொது முதலீட்டாளர்களின் நலன்களுக்கு தீங்கு விளைவிப்பதாக இருந்தது என தெரிவித்து, அதன் காரணமாக அபராதம் விதிக்கப்பட்டுஉள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|