பதிவு செய்த நாள்
05 ஜன2021
12:45
மார்கழி மாதம் துவக்கம் முதலே பனிப்பொழிவு அதிகமாக இருந்து வருகிறது. தற்போது, மழையும் அவ்வப்போது பெய்துவருவதால் குளிரின் தாக்கம் கூடியுள்ளது எனலாம். இதனால், குளிர்கால ஆடைகளின் தேவை அதிகரித்து, விற்பனையும் அமோகமாக நடந்து வருகிறது.
சாலையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கடைகளில், 'ஸ்வெட்டர்', போர்வை உள்ளிட்ட கம்பளி ஆடைகள், திருப்பூர், ஈரோடு மற்றும் சுற்றுப்பகுதிகளில் இருந்து மொத்தமாக கொள்முதல் செய்துவந்து இங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.ஸ்வெட்டர், மப்ளர், ஸ்கார்ப், தொப்பி என, அனைத்து குளிர்கால ஆடைகளும் விற்கப்படுவதால் மக்கள் பலரும் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். மேலும் மழையில் இருந்து தப்பிக்கவும், உடலை பாதுகாக்க உதவும் குடை, தொப்பி, 'ரெயின்கோட்' உள்ளிட்டவற்றின் விற்பனையும் சூடுபிடித்துள்ளது.
இதுகுறித்து, வியாபாரிகள் கூறியதாவது:நவ., முதல் ஜன., மாதங்கள் வரையிலான குளிர்காலத்தில் வழக்கமாக, குளிர் சீதோஷணத்துக்கு ஏற்ற 'ஸ்வெட்டர்' உள்ளிட்டவற்றின் விற்பனை அதிகமாக இருக்கும். தற்போது, குழந்தைகள், பெரியவர்களுக்கு என கம்பளி பொருட்கள் அதிகளவில் விற்பனையாகின்றன.ஸ்வெட்டர்கள் தரம், வண்ணத்திற்கு ஏற்ப குறைந்த பட்சம், 150 முதல் அதிகபட்சம், 500 ரூபாய் வரை விற்கப்படுகின்றன.
'ரெயின்கோட்' தரத்திற்கு ஏற்ப, 250 ரூபாய் முதல், 900 ரூபாய் வரை விற்கப்படுகிறது. தவிர, குழந்தைகள், பெண்கள், ஆண்களுக்கென தனித்தனியாக குடைகள் விற்கப்படுகின்றன .வழக்கமாக, வெயில் காலத்தை விட மழைக்காலத்தில் தான் குடை விற்பனை அதிகம் இருக்கும். குட்டீஸ்களை கவரும் குடைகளும் அதிகம் உள்ளது. குடைகள் பெரும்பாலும் பெங்களூரில் இருந்து கொண்டுவரப்படுகின்றன. ஸ்வெட்டர், ரெயின்கோட், ஸ்கார்ப் உள்ளிட்டவை, திருப்பூர், ஊட்டியில் இருந்தும் வாங்கிவந்து விற்கிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|