பதிவு செய்த நாள்
05 ஜன2021
12:48
புதுடில்லி: 'ஹோண்டா மோட்டார்சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா' நிறுவனம், டிசம்பர் மாதத்தில், 2.63 லட்சம் வாகனங்களை விற்பனை செய்திருப்பதாக தெரிவித்துள்ளது.
கடந்த, 2019ம் ஆண்டு டிசம்பரில், 2.55 லட்சம் வாகனங்களே விற்பனை ஆகியிருந்த நிலையில், கடந்த டிசம்பரில் அதைவிட அதிகம் விற்பனை ஆகியிருக்கிறது.பண்டிகை காலத்துக்குப் பிறகும் தேவைகள் அதிகரித்து வருவதையே டிசம்பர் மாத விற்பனை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது. மேலும், தொடர்ந்து ஐந்து மாதங்களாகவே, இந்நிறுவனத்தின் விற்பனை அதிகரித்து வருகிறது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவின் இயக்குனர் யத்விந்தர் சிங் குலேரியா கூறியதாவது:டிசம்பரில் விற்பனை அதிகரித்ததை அடுத்து, ஒரு புதிய நம்பிக்கையுடன், 2021ம் ஆண்டில் நாங்கள் நுழைந்திருக்கிறோம். அடுத்த இரு காலாண்டிலும், ஓரளவு வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம்.அத்துடன், இந்த ஆண்டு, எங்கள் நிறுவனத்தின், 20வது ஆண்டுவிழாவை கொண்டாட இருக்கிறோம். புதிய அறிமுகங்களுடன் வாடிக்கையாளர்களைச் சந்திக்க இருக்கிறோம்.இவ்வாறு கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|