டிசம்பரில் வலுப்பெற்றது தயாரிப்பு துறை வளர்ச்சிடிசம்பரில் வலுப்பெற்றது தயாரிப்பு துறை வளர்ச்சி ... கங்குலி நடித்த அதானி நிறுவன எண்ணெய் விளம்பரம் நிறுத்தம் கங்குலி நடித்த அதானி நிறுவன எண்ணெய் விளம்பரம் நிறுத்தம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
தியேட்டர்களில் 100% இருக்கைகளுக்கு அனுமதி – பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜன
2021
20:25

பொங்கல் பண்டிகையை ஒட்டி தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கும் அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு. இதனால் பி.வி.ஆர்., மற்றும் ஐநாக்ஸ் போன்ற தியேட்டர் நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.

கொரோனா பரவல் அச்சம் காரணமாக திரையரங்குகள் போன்ற கேளிக்கை இடங்கள் பல மாதங்களாக திறக்கப்படாமல் இருந்தன. அத்தொழிலில் உள்ளவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் 50% இருக்கைகளை மட்டும் நிரப்பிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு திங்களன்று நூறு சதவீத பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என உத்தரவிட்டுள்ளது. முன்னதாக நடிகர் விஜய், முதல்வர் பழனிசாமியை சந்தித்து இக்கோரிக்கையை வைத்திருந்தார். பல கோடி ரூபாய் செலவில் தயாரான அவரது மாஸ்டர் படம் ஏப்ரலில் வெளியாகியிருக்க வேண்டியது. தற்போது அரசின் அறிவிப்பால் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.

தமிழக அரசின் இம்முடிவால் பி.வி.ஆர்., மற்றும் ஐநாக்ஸ் போன்ற தியேட்டர் நிறுவன பங்குகள் கணிசமான ஏற்றம் கண்டுள்ளன. திங்களன்று இறங்குமுகத்தில் இருந்த பி.வி.ஆர்., பங்குகள் தற்போது 3 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளன. ஐநாக்ஸ் பங்குகளும் 6 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளன. முன்னதாக நவ., மாதம் மஹா., அரசு தியேட்டர்களை திறக்க அனுமதித்த போது இப்பங்குகள் அதிகளவு உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே ஊரடங்கு வழிமுறைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகள் வழங்கி வந்த மருத்துவர் பிரப்தீப் கவுர் மக்களை எச்சரித்துள்ளார். டுவிட்டரில் தியேட்டர் படத்தை வெளியிட்டு, “சமூக இடைவெளி இல்லாத மூடிய பகுதி என்பது கொரோனா வைரஸ் வெடித்து பரவ ஏற்ற இடம். இது போன்ற அமைப்புகளை மக்கள் தவிர்க்க வேண்டும்” என கூறியுள்ளார்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)