டிசம்பரில் வலுப்பெற்றது தயாரிப்பு துறை வளர்ச்சிடிசம்பரில் வலுப்பெற்றது தயாரிப்பு துறை வளர்ச்சி ...  கங்குலிக்கு ஏற்பட்ட மாரடைப்பால் நிறுத்தப்பட்ட எண்ணெய் விளம்பரம் கங்குலிக்கு ஏற்பட்ட மாரடைப்பால் நிறுத்தப்பட்ட எண்ணெய் விளம்பரம் ...
கங்குலி நடித்த அதானி நிறுவன எண்ணெய் விளம்பரம் நிறுத்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜன
2021
20:26

புதுடில்லி: இதயத்திற்கு நல்லது என்று கங்குலி நடித்த அதானி நிறுவன பார்ச்சூன் ரைஸ்பிரான் எண்ணெய் விளம்பரத்தின் ஒளிபரப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

48 வயதாகும் பி.சி.சி.ஐ., தலைவர் சவுரவ் கங்குலிக்கு கடந்த வாரம் நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்தை பரிசோதித்ததில் தமனிகளில் 70% அடைப்பு கண்டறியப்பட்டது. ஆஞ்சியோபிளாஸ்டி மூலம் ஒரு தமனியில் ஸ்டன்ட் பொருத்தியுள்ளனர். அவரது அரசியல் நுழைவு குறித்த ஊகங்கள் காரணமாக அவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டிருக்கலாம் என்று அவரது நண்பர்கள் மற்றும் முன்னாள் அணியினர் கூறுகின்றனர்.

இந்நிலையில் இதயத்திற்கு ஆரோக்கியமானது என்று கூறி கங்குலி நடித்த பார்ச்சூன் ரைஸ் பிரான் எண்ணெய் விளம்பரம் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்திற்கும், கிண்டலுக்கும் உள்ளானது. இதனையடுத்து அந்த விளம்பர ஒளிபரப்பை தற்காலிமாக அந்நிறுவனம் நிறுத்தியுள்ளது. இது தொடர்பாக அறிக்கை ஒன்று அதானி வில்மர் நிறுவனத்தின் துணை சி.இ.ஓ.,வால் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், “ரைஸ்பிரான் எண்ணெய் உலகின் மிகவும் ஆரோக்கியமான எண்ணெய்களில் ஒன்றாகும். இதிலுள்ள இயற்கையான ஆன்டிஆக்சிடென்ட்டுகள் மற்றும் ஒரைசனால் கெட்ட கொழுப்பை குறைக்கிறது. இது ஒரு சமையல் எண்ணெய் தானே தவிர, மருந்து கிடையாது. இதய பாதிப்புக்கு உணவு மற்றும் பரம்பரை என பல காரணிகள் உள்ளன.” என்று கூறியுள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)