பதிவு செய்த நாள்
06 ஜன2021
21:16
புதுடில்லி:கடந்த டிசம்பர் மாதத்தில், நாட்டின் சேவைகள் துறை, மெதுவான வளர்ச்சியையே கண்டுள்ளது.
‘ஐ.எச்.எஸ் – மார்க்கிட் இந்தியா’ நிறுவனம், தகவல் தொழில்நுட்பம், வியாபாரம், ஓட்டல், சுற்றுலா, போக்குவரத்து, நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட், வர்த்தகம், கட்டுமானம் உள்ளிட்ட சேவை துறை நிறுவனங்களிடம் ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
கடந்த நவம்பரில், சேவை துறைகளின் வளர்ச்சி, 52.3 புள்ளிகளாக இருந்த நிலையில்,
டிசம்பரில், 53.7 புள்ளிகளாகஅதிகரித்துள்ளது.இந்த குறியீடு, 50 புள்ளிகளுக்கு மேல் இருந்தால், வளர்ச்சியையும்; 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவையும் குறிக்கும்.கொரோனாவால் பாதிப்புகள் இருந்தாலும், நிறுவனங்களுக்கு புதிய வேலைகளுக்கான, ‘ஆர்டர்’கள்
கிடைத்ததை அடுத்து, வளர்ச்சி காணப்பட்டுஉள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, வெளிநாடுகளுக்கான பயணச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. புதிய ஏற்றுமதி வாய்ப்புகளும் கணிசமாக இம்மாதத்தில் குறைந்து உள்ளன.வேலைவாய்ப்புகளை பொறுத்தவரை, பணப் புழக்க பிரச்னைகள் மற்றும் தேவை குறைந்து வருவது ஆகிய காரணங்களால், ஊழியர் நியமனங்கள் நிறுத்தப்பட்டு விட்டன. மேலும், வணிக நம்பிக்கையும் சரிந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, நடப்பு ஆண்டின் துவக்கப் பகுதி, தொடர்ந்து சவாலானதாக இருக்கும்.
ஆனாலும், கொரோனாவுக்கான தடுப்பூசிகள் கிடைத்தவுடன் நிலையான மீட்சி ஏற்பட்டு, இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|