பதிவு செய்த நாள்
06 ஜன2021
21:19
புதுடில்லி:முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி, ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர் என்ற இடத்தை அண்மையில் பிடித்தவர், சீனாவைச் சேர்ந்த தொழிலதிபரான,
ஜாங் ஷான்ஷன்.
தற்போது, இவர் பங்குச் சந்தை பிதாமகரான, வாரன் பபெட்டையும் பின்னுக்கு தள்ளி உள்ளார்.
சீனாவைச் சேர்ந்த, ஜாங் ஷான்ஷன், ‘நோங்பு ஸ்பிரிங்’ எனும், பாட்டில் தண்ணீர் வணிகத்தில்
முன்னணியில் இருப்பவர்.புத்தாண்டு துவக்கத்திலிருந்து இவரது சொத்து மதிப்பு, 98 ஆயிரத்து, 550 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்து, கடந்த செவ்வாய் அன்று நிலவரப்படி, 6.63 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என, ‘புளூபெர்க் பில்லியனர்ஸ் இண்டெக்ஸ்’ தெரிவித்துள்ளது.
இதையடுத்து, ஜாங் ஷான்ஷன், உலகளவில் ஆறாவது பெரிய பணக்காரராக உயர்ந்துள்ளார்.
உலகளவில் முதல், 10 பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்ற, இரண்டாவது சீனர் இவர். இவருக்கு முன்னதாக, 2015ம் ஆண்டில், ரியல் எஸ்டேட் அதிபரான, வாங் ஜியான்லின் எட்டாவது இடத்தைப் பிடித்தார். அதன் பின், சீனாவைச் சேர்ந்த யாரும் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.தற்போது, ஜாங் ஷான்ஷன் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|