பதிவு செய்த நாள்
10 ஜன2021
01:54
புதுடில்லி:ஜெர்மன் நாட்டை சேர்ந்த, பி.எம்.டபுள்யு., நிறுவனத்தின் விற்பனை, கடந்த 2020ல், இந்தியாவில், 31.5 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.
இந்நிறுவனம் கடந்த ஆண்டில், 6,604 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதில், 6,092 பி.எம்.டபுள்யு., கார்களும், 512 மினி கார்களும் அடக்கம்.கொரோனா காரணமாக, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, வாகன விற்பனையும் பாதிப்புக்குள்ளாகின.
இருப்பினும், ஆண்டின் கடைசியில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், பொருளாதார செயல்பாடுகள் மீட்சி காணத் துவங்கியதை அடுத்து, விற்பனையும் அதிகரித்தது.இதன் தொடர்ச்சியாக, நடப்பு ஆண்டிலும் விற்பனை அதிகரிக்கும் என, இந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.இதற்கிடையே, மற்றொரு ஆடம்பர கார் நிறுவனமான, மெர்சிடஸ் பென்ஸ் அதன் வாகனங்களின் விலையை, 15ம் தேதியிலிருந்து, 5 சதவீதம் அதிகரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|