நாளை தங்க பத்திர வெளியீடு நாளை தங்க பத்திர வெளியீடு ...  வழிகாட்டும் மஹாராஷ்டிரம்; பின்பற்றுமா தமிழகம்? வழிகாட்டும் மஹாராஷ்டிரம்; பின்பற்றுமா தமிழகம்? ...
தங்க நகை வாங்க கே.ஒய்.சி., வருவாய்த்துறை விளக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜன
2021
01:56

புதுடில்லி:தங்கம், வெள்ளி போன்றவற்றை ரொக்கத்தில், 2 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக வாங்குவதாக இருந்தாலும், கே.ஒய்.சி., எனும் நம் தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டும் என, சில நாட்களுக்கு முன் செய்திகள் பரவின.

இதையடுத்து, 2 லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருந்தாலும், கே.ஒய்.சி., எனும் நம் தனிப்பட்ட, ‘பான், ஆதார்’ எண்கள் உள்ளிட்ட தகவல்களை தெரிவிக்க வேண்டியதிருக்குமா என்பது குறித்த விளக்கத்தை, மத்திய வருவாய் துறை வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டு உள்ளதாவது:

கடந்த, 2020 டிசம்பர், 28ம் தேதி அறிவிப்பில், 2002ம் ஆண்டு சட்டத்தின் கீழ், 10 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு அதிகமாக ரொக்கத்தில் தங்கம், வெள்ளி, மற்றும் விலை உயர்ந்த நவரத்தின கற்களை வாங்கும்போது, கே.ஒய்.சி., தகவல்கள் கட்டாயமாக வழங்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

உலகளாவிய பண மோசடி மற்றும் பயங்கரவாத செயல்களுக்கான நிதியுதவியை கண்காணிக்கும் அமைப்பான, எப்.ஏ.டி.எப்., கோரிக்கையின் அடிப்படையில் இத்தகைய, கே.ஒய்.சி., தகவல்கள் வாடிக்கையாளர்களிடம் வாங்கப்படுகின்றன.இந்தியா இந்த அமைப்பின் உறுப்பினராக, 2010ம் ஆண்டு முதல் இருந்து வருகிறது.

இந்தியாவில், ஏற்கனவே கே.ஒய்.சி., தகவல்கள் இல்லாமல், ரொக்கத்தில், 2 லட்சம் ரூபாய்க்கு மேல், நகைகள் வாங்க அனுமதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மற்றபடி, புதிதாக எந்த கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்படவில்லை.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)