பதிவு செய்த நாள்
10 ஜன2021
01:56
புதுடில்லி:தங்கம், வெள்ளி போன்றவற்றை ரொக்கத்தில், 2 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக வாங்குவதாக இருந்தாலும், கே.ஒய்.சி., எனும் நம் தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டும் என, சில நாட்களுக்கு முன் செய்திகள் பரவின.
இதையடுத்து, 2 லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருந்தாலும், கே.ஒய்.சி., எனும் நம் தனிப்பட்ட, ‘பான், ஆதார்’ எண்கள் உள்ளிட்ட தகவல்களை தெரிவிக்க வேண்டியதிருக்குமா என்பது குறித்த விளக்கத்தை, மத்திய வருவாய் துறை வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
கடந்த, 2020 டிசம்பர், 28ம் தேதி அறிவிப்பில், 2002ம் ஆண்டு சட்டத்தின் கீழ், 10 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு அதிகமாக ரொக்கத்தில் தங்கம், வெள்ளி, மற்றும் விலை உயர்ந்த நவரத்தின கற்களை வாங்கும்போது, கே.ஒய்.சி., தகவல்கள் கட்டாயமாக வழங்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
உலகளாவிய பண மோசடி மற்றும் பயங்கரவாத செயல்களுக்கான நிதியுதவியை கண்காணிக்கும் அமைப்பான, எப்.ஏ.டி.எப்., கோரிக்கையின் அடிப்படையில் இத்தகைய, கே.ஒய்.சி., தகவல்கள் வாடிக்கையாளர்களிடம் வாங்கப்படுகின்றன.இந்தியா இந்த அமைப்பின் உறுப்பினராக, 2010ம் ஆண்டு முதல் இருந்து வருகிறது.
இந்தியாவில், ஏற்கனவே கே.ஒய்.சி., தகவல்கள் இல்லாமல், ரொக்கத்தில், 2 லட்சம் ரூபாய்க்கு மேல், நகைகள் வாங்க அனுமதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மற்றபடி, புதிதாக எந்த கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்படவில்லை.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|