பதிவு செய்த நாள்
10 ஜன2021
22:40
பங்கு முதலீட்டில் சில்லரை முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பதும், இந்த ஆண்டு சில்லரை முதலீட்டாளர்கள், பங்கு முதலீட்டில் ஈடுபடுவது மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா பாதிப்புக்கு நடுவே, பங்கு பரிவர்த்தனைக்கான, ‘டிமெட்’ கணக்கு அதிக அளவில் துவக்கப்பட்டது.கொரோனா பாதிப்பு காரணமாக, நல்ல பங்குகளில் குறைந்த விலையில் முதலீடு செய்யும் வாய்ப்பு, பொது முடக்கம் காரணமாக அதிகரித்த சேமிப்பு மற்றும் ‘டிஜிட்டல்’ சேவைகள் மூலமான முதலீடு வசதி ஆகியவை இதற்கான காரணங்களாக அமைகின்றன.
பங்கு முதலீட்டில் சில்லரை முதலீட்டாளர்கள் ஈடுபடுவது, இந்த ஆண்டு மேலும் அதிகரிக்கும் என, பங்கு வர்த்தக செயலி நிறுவனமான, ‘குரோ’ நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும், தற்கால தலைமுறையினர் இளம் வயதிலேயே முதலீடு செய்ய முன்வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
லக்னோ, ஆமதாபாத், ஜெய்ப்பூர் உள்ளிட்ட இரண்டாம் கட்ட நகரங்களில், சில்லரை முதலீட்டாளர்கள் அதிகரித்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. நகர்ப்புற நடுத்தர மக்களின் செலவு பழக்கம் மாறியிருப்பதால், சேமிப்பும் அதிகரித்திருப்பதாக வல்லுனர்கள் கருதுகின்றனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|