உலக பட்டியலில் 11இந்திய நிறுவனங்கள் உலக பட்டியலில் 11இந்திய நிறுவனங்கள் ...  சிமென்ட் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி சிமென்ட் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி ...
வேகமாக மாறும் இந்தியர்கள் ‘சிக்னல்’ நிறுவனர் ஆச்சரியம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜன
2021
20:41

புதுடில்லி:‘வாட்ஸ் ஆப்’ நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களின் தகவல்களை பகிர்ந்து கொள்வது குறித்த புதிய கட்டுப்பாடுகளை அறிவித்ததை அடுத்து, ‘சிக்னல்’ எனும் சமூக ஊடகத்தை, மக்கள் அதிகளவில் பயன்படுத்த துவங்கி உள்ளனர்.

இதுகுறித்து, ‘சிக்னல்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் பிரையன் ஆக்டன் கூறியதாவது: எங்களுடைய, எளிய மற்றும் நேர்மையான சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமை கொள்கைகள் காரணமாக, அதிகமானோர், ‘சிக்னல்’ செயலியை பதிவிறக்கம் செய்து வருகின்றனர். இந்திய சந்தையை பொறுத்தவரை , எங்களது வளர்ச்சி மிகவும் ஆச்சரியம் தரத் தக்கதாக இருக்கிறது.

கடந்த, 72 மணி நேரத்தில், பதிவிறக்கம் மிக வேகமாக இருந்தது.இவ்வாறு கூறினார். பிரையன் ஆக்டன் ‘வாட்ஸ் ஆப்’ நிறுவனர்களில் ஒருவர் ஆவார். ‘பேஸ் புக்’ நிறுவனம், ‘வாட்ஸ் ஆப்’செயலியை கையகப்படுத்திய போது, அதை ஏற்காமல், அதிலிருந்து வெளியேறினார்.

கடந்த 2014ல், சிக்னல் செயலியை, மோக்ஸி மார்லின்ஸ்பைக் என்பவருடன் இணைந்து அறிமுகம் செய்தார்.தற்போது, ‘வாட்ஸ் ஆப்’ நிறுவனம், வாடிக்கையாளர்களுடைய தகவல்களை, விளம்பர வணிகத்துக்காக பகிர்ந்து கொள்ளாது என அறிவித்துள்ளது. ஆனாலும், பிரையன் ஆக்டன், ‘பேஸ்புக்’ நிறுவனத்தின் அப்டேட் பாலிசிகள் மிகவும் குழப்பமானவையாக இருக்கும் என்றும்; சாதாரண வாடிக்கையாளர்களால் புரிந்துகொள்வது சிரமமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

டெலிகிராம்

கடந்த, 72 மணி நேரத்தில் மட்டும், 2.5 கோடி புதிய பயனர்கள் சேர்ந்திருப்பதாக, ‘டெலிகிராம்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாவல் துரோவ் தெரிவித்துஉள்ளார். ‘டெலிகிராம்’ செயலி யின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, தற்போது, 50 கோடியை தாண்டியுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)