பதிவு செய்த நாள்
13 ஜன2021
20:52
புதுடில்லி:ஐ.ஆர்.எப்.சி., எனும், ‘இந்திய ரயில்வே பைனான்ஸ் கார்ப்பரேஷன்’, 18ம் தேதியன்று, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதாக ,முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறையின் செயலர் துஹின் காந்தா பாண்டே தெரிவித்துஉள்ளார்
.இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:ஐ.ஆர்.எப்.சி., நிறுவனம், 18ம் தேதியன்று, புதிய பங்கு வெளியீட்டுக்கு வர உள்ளது. 20ம் தேதியன்று முடிவடைகிறது. இந்த பங்கு வெளியீட்டின் மூலமாக, 4,600 கோடி ரூபாயை திரட்ட திட்டமிடப்பட்டுஉள்ளது.பங்கு வெளியீட்டை முன்னிட்டு, ஒரு பங்கின் விலை, 25 – 26 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மொத்தம், 178.20 கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன. இவ்வாறு தெரிவித்து உள்ளார்.இந்நிறுவனம், 1986ல் துவங்கப்பட்டது. இந்திய ரயில்வே, சொத்துக்களை உருவாக்குவதற்கு தேவையான நிதியை, நிதிச் சந்தைகளிலிருந்து பெற்றுத் தருவதே இதன் முதன்மை பணியாகும்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|