பதிவு செய்த நாள்
13 ஜன2021
20:57
சென்னை:ஹூண்டாய் கார்கள், முதல் முறையாக, ரயில்வே மூலமாக நேபாளத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, ‘ஹூண்டாய் மோட்டார் இந்தியா’ வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஹூண்டாய் நிறுவனத்தின், 125 கார்கள், தொழிற்சாலை அமைந்துள்ள இருங்காட்டுக்கோட்டை அருகில் உள்ள, வாலாஜாபாத் ரயில் நிலையத்திலிருந்து, நேபாளத்திற்கு, முதல் முறையாக ரயிலில் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழலுக்கு ஏதுவாக இந்த செயல்பாடு துவங்கப்பட்டுள்ளது.
இந்த கார்கள், இந்தியா – நேபாளம் எல்லைக்கு அருகில் உள்ள, நவுதன்வா வரை செல்லும். அதன் பின் அங்கிருந்து, நேபாள மலைப் பிரதேசத்தில், சாலை மார்க்கமாக கொண்டு செல்லப்படும்.‘‘ஹூண்டாய் நிறுவனம், சுற்றுச்சூழலுக்கு உகந்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ‘‘அந்த வகையில் முதல் முறையாக, 125 கார்களை, ரயில் மூலமாக ஏற்றுமதி செய்துள்ளோம்,’’ என, ஹூண்டாய் நிறுவனத்தின் உற்பத்தித் துறை இயக்குனர் கணேஷ் மணி தெரிவித்தார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|