சிமென்ட் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி சிமென்ட் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி ...  உலக தொழில்நுட்ப மையங்களில் முதலிடத்தை பிடித்தது பெங்களூரு உலக தொழில்நுட்ப மையங்களில் முதலிடத்தை பிடித்தது பெங்களூரு ...
இழுத்து மூடப்படும் இரு பொதுத்துறை நிறுவனங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜன
2021
22:48

புதுடில்லி:மத்திய அரசு, ‘ஸ்கூட்டர்ஸ் இந்தியா, பாரத் பம்ப்ஸ் அண்டு கம்ப்ரசர்ஸ்’ ஆகிய இரு பொதுத்துறை நிறுவனங்களையும் மூடிவிடும் முடிவுக்கு இறுதியாக வந்துவிட்டது.

இந்த நிறுவனங்களையும் வாங்குவதற்கு, சரியான நபர்கள் அல்லது நிறுவனங்கள் கிடைக்காததால், மூடிவிடும் முடிவுக்கு அரசு வந்துவிட்டது.இந்த இரு நிறுவனங்களும், உத்தர பிரதேசத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருபவை.கடந்த புதன் கிழமை அன்று நடைபெற்ற அமைச்சரவை குழு கூட்டத்தில், இந்த இரு நிறுவனங்களையும் மூடிவிடும் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

இந்த நிறுவனங்களை விற்பதற்காக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டபோதிலும், இவற்றை வாங்க யாரும் முன்வரவில்லை.இதையடுத்து, முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறை, நிறுவனங்களை மூடிவிடும் முடிவை முன்மொழிந்து உள்ளது.

ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனம், 1972ம் ஆண்டில் துவக்கப்பட்டது. 1975ல், இந்நிறுவனம், உள்நாட்டில், ‘விஜய் சூப்பர்’ எனும் பிராண்டிலும்; வெளிநாடுகளில், ‘லாம்ப்ரெட்டா’ எனும் பெயரிலும் ஸ்கூட்டர்களை தயாரித்து சந்தைப்படுத்தியது. அடுத்தகட்டமாக, ‘விக்ரம்’ எனும் பெயரில், மூன்று சக்கர வாகனங்களையும் அறிமுகம் செய்தது.நாளடைவில், சந்தையில் தாக்குப் பிடிக்க முடியாமல், நஷ்டத்தை சந்தித்து, தற்போது, முற்றாக மூடப்பட்டுவிடும் நிலைக்கு வந்துவிட்டது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)