பதிவு செய்த நாள்
15 ஜன2021
22:50
புதுடில்லி:கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து, பங்குச் சந்தைகள் ஏற்றம் பெற்றதை அடுத்து, இந்தியாவின் அதிக சந்தை மதிப்பு கொண்ட குழுமமாக, டாடா குழுமம் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது.
டாடா குழுமத்தின் அனைத்து நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பும், கடந்த புதனன்று, 17 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்தது. அன்றைய தினம், எச்.டி.எப்.சி., குழுமத்தின் சந்தை மதிப்பு, 15.25 லட்சம் கோடி ரூபாயாக குறைந்து இருந்தது.கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், எச்.டி.எப்.சி., குழுமம், டாடா குழுமத்தை பின்னுக்குத் தள்ளி, சந்தை மதிப்பில் முன்னணிக்கு வந்தது.
இருப்பினும், கடந்த ஓராண்டில் மட்டும் டாடா குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பு, 42 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.கடந்த ஒரு மாதத்தில் மட்டும், இக்குழுமத்தின் சந்தை மதிப்பு, 13 சதவீதம் அதாவது, 1.9 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
அதேசமயம், கடந்த ஓராண்டில், எச்.டி.எப்.சி., 15 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது.கடந்த ஓராண்டில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ், 27 சதவீதமும்; பஜாஜ் குழுமம், 11 சதவீதமும் சந்தை மதிப்பில் அதிகரித்துள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|