காப்பீட்டு நிறுவனங்கள் தத்து எடுக்க வேண்டும் காப்பீட்டு நிறுவனங்கள் தத்து எடுக்க வேண்டும் ...  கொரோனா தாக்கம் காரணமாக வீடுகள் பரப்பளவு அதிகரிப்பு கொரோனா தாக்கம் காரணமாக வீடுகள் பரப்பளவு அதிகரிப்பு ...
போட்டியில் குதிக்கும் ‘டாடா’ குழுமம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜன
2021
21:42

புதுடில்லி:‘டாடா’ குழுமம், ‘பிக்பாஸ்கெட்’ மற்றும் ‘ஒன் மில்லிகிராம்’ ஆகிய நிறுவனங்களை கையகப்படுத்தும் முயற்சியை தீவிரப்படுத்தி உள்ளது.

காபியிலிருந்து, கார் வரை தயாரிக்கும், டாடா குழுமம், அதன் அத்தனை தயாரிப்புகளையும் ஒரே செயலி மூலமாக ஆன்லைனில் விற்பனை செய்யும் முடிவில் உள்ளது. இதன் பொருட்டு, ஆன்லைன் வினியோகத்தில் இருக்கும் சில நிறுவனங்களை கையகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

இதையடுத்து, முதற்கட்டமாக, ஆன்லைன் மளிகை வணிகத்தில் ஈடுபட்டுள்ள பிக்பாஸ்கெட் நிறுவனத்தில், முதல்கட்டமாக, 1,450 – 1,825 கோடி ரூபாயை முதலீடு செய்து, அதன் பெரும்பான்மை பங்குகளை கையகப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளது. இதேபோல், ஆன்லைன் மருந்து வினியோகத்தில் ஈடுபட்டுள்ள, மும்பையைச் சேர்ந்த, ஒன் மில்லிகிராம் நிறுவனத்தை கையகப்படுத்தும் முயற்சியும் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.

முகேஷ் அம்பானியின், ‘ஜியோ மார்ட்’ மற்றும் ‘அமேசான், பிளிப்கார்ட்’ ஆகியவற்றின் போட்டியை சமாளிக்கும் வகையில், பல நிறுவனங்களை கையகப்படுத்த, டாடா குழுமம் திட்டமிட்டுள்ளது.இதன் ஒரு பகுதியாகவே, இந்த இரு நிறுவனங்களை கையகப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறது.

பிக்பாஸ்கெட் டீலை பொறுத்தவரை, மொத்தம் 8,750 கோடி ரூபாய்க்கு கைமாறும் என, துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும், பிக்பாஸ்கெட் நிறுவனத்தை கையகப்படுத்தியதும், அந்நிறுவனத்தை பங்குச் சந்தையில் பட்டியலிடவும், டாடா குழுமம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)