போட்டியில் குதிக்கும் ‘டாடா’ குழுமம் போட்டியில் குதிக்கும் ‘டாடா’ குழுமம் ...  சீன கடன் செயலிகள் அதிகரிக்கும் அரசின் கிடுக்கிப்பிடி சீன கடன் செயலிகள் அதிகரிக்கும் அரசின் கிடுக்கிப்பிடி ...
கொரோனா தாக்கம் காரணமாக வீடுகள் பரப்பளவு அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2021
21:52

புதுடில்லி:அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளின் பரப்பளவு, கொரோனாவுக்குப் பிறகு அதிகரித்திருப்பதாக, சொத்து ஆலோசனை நிறுவனமான, ‘அனராக்’ தெரிவித்துள்ளது.

இது குறித்து, மேலும் தெரிவித்துள்ளதாவது:நாட்டில் உள்ள, ஏழு முக்கிய நகரங்களில், அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளின் சராசரி பரப்பளவு அதிகரித்துள்ளது. கடந்த, 2019ம் ஆண்டில், ஒரு வீட்டின் சராசரி பரப்பளவு, 1,050 சதுர அடியாக இருந்த நிலையில், கடந்த ஆண்டில், 1,150 சதுர அடியாக அதிகரித்துள்ளது. இது, 10 சதவீத உயர்வாகும்.

சராசரி பரப்பளவு

கடந்த, 2016ம் ஆண்டிலிருந்து, வீடுகளின் சராசரி பரப்பளவு, குறைந்து வந்து கொண்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டுகளில், வீடுகளின் பரப்பளவு குறைந்து வந்ததற்கு, இரண்டு காரணங்கள் உள்ளன.

தேவை அதிகரிப்பு

முதல் காரணம், விலை சகாயமாகவும்; பராமரிக்க எளிதாகவும் இருக்க வேண்டும் என்ற இளைஞர்களின் மனப்போக்கு.

இரண்டாவது, சிறிய அளவில், குறைந்த விலையில் வீடுகளை கட்டி, வாடிக்கையாளர்களை அதிகளவில் ஈர்க்க முயற்சித்த நிறுவனங்களின் எண்ணம். ஆனால், கடந்த ஆண்டில், கொரோனா காரணமாக வீட்டிலிருந்து பணி புரியும் நிலை ஏற்பட்டுவிட்டதால், சற்று பெரிதான வீடுகளுக்கான தேவை அதிகரித்து விட்டது.சென்னையை பொறுத்தவரை, சராசரியாக, 9 சதவீத அளவுக்கு வீடுகளின் பரப்பளவு அதிகரித்துள்ளது.

அதிகபட்சம்

கடந்த, 2019ல் சராசரியாக, 1,100 சதுர அடியாக இருந்தது, 2020ல் 1,200 சதுர அடியாக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மும்பையில், 21 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)