பதிவு செய்த நாள்
24 ஜன2021
01:23
புதுடில்லி:கொரோனாவுக்கான தடுப்பூசிகளை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு எடுத்துச் செல்ல வசதியாக குளிர்பதன வசதிகளுடன் கூடிய டிரக்குகள் தயாரிக்கப்பட்டு
தயாராக இருப்பதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து இந்நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: தடுப்பூசிகளை நாடு முழுதும் கொண்டு செல்வதற்கு நம்பகமான பாதுகாப்பான வாகனங்களை டாடா மோட்டார்ஸ் தயாரித்துள்ளது. இந்த புதிய வகை வாகனங்கள் தேவையான வெப்ப நிலை கொள்ளளவு எடை ஆகியவற்றின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு கொள்ளளவிலும் தயாரிக்கப்பட்டுள்ளன.
அதிக அளவிலான தடுப்பூசிகளை எடுத்துச் செல்வதற்கு மட்டுமின்றி; மிகச் சிறிய அளவுக்கு எடுத்துச் செல்லும் வகையிலும் பலதரப்பட்ட வாகனங்கள் தயாராக இருக்கின்றன. கொரோனா தடுப்பூசியை நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் அதன் தன்மை கெடாமல் கொண்டு செல்லும் முயற்சியில் இதன் மூலம் டாடா மோட்டார்ஸ் தன்னையும் இணைத்துக் கொண்டுஉள்ளது. இவ்வாறு தெரிவித்து உள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|