வாகனக் காப்பீட்டில் மற்றொரு பகல்கொள்ளை?வாகனக் காப்பீட்டில் மற்றொரு பகல்கொள்ளை? ...  ‘வாகன காப்பீட்டு நடைமுறை வெளிப்படையானதாக இல்லை’ ‘வாகன காப்பீட்டு நடைமுறை வெளிப்படையானதாக இல்லை’ ...
வெளிநாடுகளுக்குஇரும்புத்தாது ஏற்றுமதி: மூலப்பொருள் தட்டுப்பாடு அதிகரிக்கும் வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜன
2021
14:40

கொரோனாவால் முடங்கிய தொழில் துறையை, மீண்டும் தலைநிமிரச் செய்யும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் இறங்கியுள்ளன. வங்கிக்கடன் உட்பட திட்டங்களால் படிப்படியாக மீள ஆரம்பித்த தொழில் துறைக்கு, இரும்பு உட்பட மூலப்பொருட்களின் விலை உயர்வு, வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டுவருகிறது.

திணறும் தொழில் நிறுவனங்களுக்கு உற்பத்தி செலவும் கூடிவருகிறது. இரும்பு விலையும் இமயம்போல் உயர்வதால் கட்டுமான பணிகளும் காலதாமதமாகி வருகிறது. நாளுக்கு நாள் விலை அதிகரிப்பால், முன்பு எடுக்கப்பட்ட ஆர்டர்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும், தொழில் துறையினர் புலம்புகின்றனர்.கடந்தாண்டு நவ., மாதம் ஆரம்பித்த விலை உயர்வு, தொழில் துறையை முடக்கி வருவதால் இரும்பு தாது உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியை கட்டுப்படுத்தி, இறக்குமதிக்கு வழிவகுக்க, மத்திய அரசிடம் பல்வேறு தரப்பினரும் கோரிக்கையை முன்வைக்கின்றனர்.

தொழில் முனைவோர் கூறியதாவது:கடந்தாண்டு இறுதியில், 64 ஆயிரமாக இருந்த சாதாரண இரும்பு, தற்போது, 76 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலையால், உற்பத்தி செலவும் கூடிவருகிறது. எனவே, வெளிநாடுகளுக்கு இரும்பு தாது ஏற்றுமதி செய்வதை நிறுத்த வேண்டும்.இந்தியாவில் உற்பத்தியாகும் இரும்புக்கு, வெளிநாடுகளில் தேவை அதிகரித்துள்ளது. உள்நாட்டுக்கு தேவை அதிகரித்துள்ள நிலையில், சீனா போன்ற நாடுகளுக்கு இரும்பு தாது அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, சத்தீஸ்கர் போன்ற வடமாநிலங்களில் இது அதிகம் கிடைப்பதால் அங்கிருந்து அனுப்பப்படுகின்றன.

எனவே, ஏற்றுமதியை, குறைந்தது ஆறு மாதங்களுக்காவது நிறுத்தி வைத்தால் விலை உயர்வு கட்டுக்குள் வருவதுடன், தட்டுப்பாடும் நீங்கிவிடும். ஜப்பான், கொரியா, தாய்லாந்து, இந்தோனேசியா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதியாக இரும்பு தயாராக உள்ளது. இறக்குமதி வரியை குறைத்து அரசு நடவடிக்கை எடுத்தால், பாதிப்புகள் கட்டுப்படுத்தப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)