வெளிநாடுகளுக்குஇரும்புத்தாது ஏற்றுமதி:  மூலப்பொருள் தட்டுப்பாடு அதிகரிக்கும் வாய்ப்புவெளிநாடுகளுக்குஇரும்புத்தாது ஏற்றுமதி: மூலப்பொருள் தட்டுப்பாடு ... ...  சென்னையில் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் சென்னையில் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ...
‘வாகன காப்பீட்டு நடைமுறை வெளிப்படையானதாக இல்லை’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜன
2021
14:44

புதுடில்லி:புதிதாக வாகனம் வாங்கும்போது, அந்த வாகனத்துக்கான காப்பீட்டுத் தொகையை, வாகனத்தின் விலையுடன் சேர்த்து மொத்தமாக, ஒரே காசோலையாக கொடுப்பது நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்நிலையில், இப்படி மொத்தமாக வாங்குவதால், வெளிப்படைத் தன்மை இல்லாமல் போய்விடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.இதனையடுத்து, இவ்விவகாரம் குறித்து ஆராய ஒரு குழுவை அமைத்தது, காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையமான, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., இக் குழுவானது, தன்னுடைய பரிந்துரையில், காப்பீட்டு நிறுவனங்களுக்கும், வாகன விற்பனை நிறுவனங்களுக்கும் தனித் தனியான காசோலைகள் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

இக்குழு, மேலும் தெரிவித்துள்ளதாவது:தற்போதைய நடைமுறையினால், காப்பீடு கவரேஜ் எவ்வளவு என்பதையோ, காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் தள்ளுபடி சலுகைகள் குறித்தோகூட வாடிக்கையாளர்களால் அறிந்துகொள்ள முடிவதில்லை.அத்துடன் காப்பீடுகள் வழங்கும் நிறுவனங்களிடம் பேரம் பேசுவதற்கான வாய்ப்புகள் கூட இருப்பதில்லை.

வாகன விற்பனையாளர்களுடன் கூட்டுச் சேர்ந்து, காப்பீடுகளை வழங்கும், ‘ வாகன காப்பீட்டு சேவை நிறுவனங்கள்’ காப்பீட்டுக்கான கட்டணத்தை பெற்று, அதை தன்னுடைய கணக்கில் வரவு வைத்துக் கொண்டு, அதன் பின்னரே காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்குகின்றன. இப்படி அனைத்து விதங்களிலும் வெளிப்படைத் தன்மை இல்லாத காரணத்தால், இனி வாடிக்கையாளர்கள் தங்களுடைய பிரீமியத்தை, நேரடியாக காப்பீட்டு நிறுவனங்களின் பெயருக்கு வழங்குமாறு செய்ய வேண்டும்.இவ்வாறு, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., குழு தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)