பதிவு செய்த நாள்
26 ஜன2021
14:45
மும்பை: வங்கி டெபிட் கார்டுகள் மூலமாக, ஏ.டி.எம்., மையங்களிலிருந்து, வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும்போது, ஒருவேளை, அவர்களது வங்கி கணக்கில் போதுமான பணம் இல்லை என்றால், அந்த பரிவர்த்தனைக்கு, வங்கிகள் அபராதத் தொகை வசூலிக்கின்றன.இந்த பரிவர்த்தனை மறுப்பு கட்டணத்தை திரும்ப பெறுமாறு, ‘அகில இந்திய வங்கி வைப்புத்தொகையாளர்கள் சங்கம்’, ரிசர்வ் வங்கியை கேட்டுக்கொண்டுள்ளது.
இது குறித்து, இந்த சங்கம் கூறிஉள்ளதாவது:ஒருவர் வங்கியில் தன்னுடைய கணக்கில் போதுமான பணம் இல்லாத நிலையில், ஏ.டி.எம்., மையத்திலிருந்து பணம் எடுக்க முயற்சித்தாலோ, அல்லது வேறு ஏதாவது பணப் பரிவர்த்தனை செய்ய முயன்றாலோ, அதை, பணம் இன்றி காசோலை வழங்கியதற்கு ஒப்பாக கருதி, 25 ரூபாய் மற்றும், ஜி.எஸ்.டி., கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஆனால், ஏ.டி.எம்., மையத்தில் ஒருவர் அவருடைய பணத்தை எடுப்பது என்பது, மூன்றாம் நபருக்கு காசோலை வழங்குவதற்கு ஒப்பானதல்ல. அவர் வங்கிக்கு சென்று தன்னுடைய பணத்தை எடுப்பதற்கு சமமானது. அபராதம் விதிப்பது அநீதியானது. இதுபோன்ற செயலால், பலர் டிஜிட்டல் பரிவர்த்தனையிலிருந்து விலகி, ரொக்க பரிவர்த்தனைக்கு திரும்புகிறார்கள். போதுமான பணத்தை பராமரிக்க இயலாத பாமரர்கள் தான், இந்த நடைமுறையால் கூடுதலாக பாதிப்புக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.எனவே, இத்தகைய அபராத கட்டணம் வசூலிக்கப்படுவதை நிறுத்த வேண்டும்.இவ்வாறு தெரிவித்து உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|