தேவையின் அடிப்படையில் வழங்கலாம் சலுகை:   பொருளாதார இலக்குக்கு நெருக்கடி தராதுதேவையின் அடிப்படையில் வழங்கலாம் சலுகை: பொருளாதார இலக்குக்கு நெருக்கடி ... ...  வாராக் கடன்களுக்கு தனி வங்கி:  பொறுப்பை தட்டி கழிக்கும் முயற்சியா? வாராக் கடன்களுக்கு தனி வங்கி: பொறுப்பை தட்டி கழிக்கும் முயற்சியா? ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
‘அபராத கட்டணம் வசூலிப்பதை வங்கிகள் நிறுத்த வேண்டும்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜன
2021
14:45

மும்பை: வங்கி டெபிட் கார்டுகள் மூலமாக, ஏ.டி.எம்., மையங்களிலிருந்து, வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும்போது, ஒருவேளை, அவர்களது வங்கி கணக்கில் போதுமான பணம் இல்லை என்றால், அந்த பரிவர்த்தனைக்கு, வங்கிகள் அபராதத் தொகை வசூலிக்கின்றன.இந்த பரிவர்த்தனை மறுப்பு கட்டணத்தை திரும்ப பெறுமாறு, ‘அகில இந்திய வங்கி வைப்புத்தொகையாளர்கள் சங்கம்’, ரிசர்வ் வங்கியை கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்து, இந்த சங்கம் கூறிஉள்ளதாவது:ஒருவர் வங்கியில் தன்னுடைய கணக்கில் போதுமான பணம் இல்லாத நிலையில், ஏ.டி.எம்., மையத்திலிருந்து பணம் எடுக்க முயற்சித்தாலோ, அல்லது வேறு ஏதாவது பணப் பரிவர்த்தனை செய்ய முயன்றாலோ, அதை, பணம் இன்றி காசோலை வழங்கியதற்கு ஒப்பாக கருதி, 25 ரூபாய் மற்றும், ஜி.எஸ்.டி., கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆனால், ஏ.டி.எம்., மையத்தில் ஒருவர் அவருடைய பணத்தை எடுப்பது என்பது, மூன்றாம் நபருக்கு காசோலை வழங்குவதற்கு ஒப்பானதல்ல. அவர் வங்கிக்கு சென்று தன்னுடைய பணத்தை எடுப்பதற்கு சமமானது. அபராதம் விதிப்பது அநீதியானது. இதுபோன்ற செயலால், பலர் டிஜிட்டல் பரிவர்த்தனையிலிருந்து விலகி, ரொக்க பரிவர்த்தனைக்கு திரும்புகிறார்கள். போதுமான பணத்தை பராமரிக்க இயலாத பாமரர்கள் தான், இந்த நடைமுறையால் கூடுதலாக பாதிப்புக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.எனவே, இத்தகைய அபராத கட்டணம் வசூலிக்கப்படுவதை நிறுத்த வேண்டும்.இவ்வாறு தெரிவித்து உள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)