பதிவு செய்த நாள்
27 ஜன2021
06:19
புதுடில்லி : நிறுவனங்கள் தொடர்பான சட்ட விவகாரங்களை கையாள, உச்ச நீதிமன்றம், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தை அமைத்துள்ளது. இந்த தீர்ப்பாயங்கள் நாட்டில் பல இடங்களில் அமைக்கப்பட்டு, வழக்குகள் விசாரிக்கப்பட்டு, தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த தீர்ப்பாயத்தின் தீர்ப்புகளை ஏற்காதபட்சத்தில், தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை அணுகி, நீதி பெறலாம்.தென் மாநிலங்களில் உள்ளவர்கள், மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை அணுக, டெல்லி செல்ல வேண்டியதாக உள்ளது.தென் மாநிலங்களில் இருப்பவர்களுக்கு வசதியாக, தற்போது, சென்னையில், மேல்முறையீட்டு தீர்ப்பாயம் துவங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திர பிரதேசம், லட்சத் தீவுகள், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள வழக்குகள் இங்கு ஏற்கப்படும்.சென்னையில் புதிதாக செயல்பட துவங்கி இருக்கும், ‘தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம்’, தென்மாநிலங்களில் உள்ள நிறுவனங்களுக்கு வசதியானதாக இருக்கும் என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|