பதிவு செய்த நாள்
27 ஜன2021
06:24
புதுடில்லி : பழைய வாகனங்களுக்கு, ‘பசுமை வரி’ விதிக்கப்படும்பட்சத்தில், வாடகை வாகனங்களுக்கான தேவைகள் அதிகரிக்கும் என்றும், பழைய வாகனங்களின் விலை கடுமையாக பாதிக்கப்படும் என்றும், வாகன சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் வாகன வாடகையும் அதிகரிக்கும் என்றும் கூறுகின்றனர்.
நாட்டின் சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்கும் பழைய வாகனங்களுக்கு, ‘பசுமை வரி’ விதிப்பதற்கான வரைவு திட்டத்துக்கு, மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதல் வழங்கினார்.இதன்படி, எட்டு ஆண்டுகள் பழைமையான வாகனங்களுக்கு, அவற்றின் தகுதி சான்றிதழ் புதிப்பிக்கப்படும்போது, சாலை வரியில், 10 முதல், 25 சதவீதம் வரை பசுமை வரி விதிக்கப்படும்.
சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு, 15 ஆண்டுகளுக்கு பிறகு, வரி விதிக்கப்படும். அத்துடன் அதிக மாசு கொண்ட இடங்களில், 50 சதவீதம் வரை வரி விதிக்கப்படும். இந்த முன்வரைவு சட்டமாகும்பட்சத்தில், அது, பழைய வாகனங்களை சாலை பயன்பாட்டிலிருந்து அகற்றுவதற்கு பயன்படாமல், வாடகை வாகனங்களை அதிகம் பயன்படுத்தவே உதவும் என்கிறார்கள், சந்தை சார்ந்தோர். மேலும், ஆறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களின் விலையும் தேவை குறைவு காரணமாக, சரிவைக் காணும் என்கிறார்கள்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|