பதிவு செய்த நாள்
30 ஜன2021
21:39
புதுடில்லி:டாடா மோட்டார்ஸ் நிறுவனம், அதன் பயணிகள் வாகன தயாரிப்பை, தனியாக பிரித்து, வேறொரு தனி நிறுவனமாக மாற்றும் திட்டத்தில் தீவிரமாக இறங்கி உள்ளது. இதற்கான பணிகள் வரும் மே,ஜூன் மாதத்துக்குள் முடிந்து விடும் என எதிர்பார்க்கிறது.
தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் உத்தரவின் படி, மார்ச், 5ம் தேதி அன்று, அவசரகால நிர்வாக குழு கூட்டத்தை கூட்டி, பங்குதாரர்களின் அனுமதியை பெற உள்ளது.இது குறித்து, நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி பாலாஜி கூறியதாவது:பங்குதாரர்கள் அனுமதி வழங்கும்பட்சத்தில், நிறுவனம், மீண்டும் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தை அணுகி இறுதி அனுமதியை பெறும்.
தற்போதைய திட்டத்தின்படி, மே அல்லது ஜூன் மாதத்துக்குள் அனைத்து பணிகளும் முடிந்துவிடும் என கருதுகிறோம்.பயணியர் வாகன பிரிவுக்கான கூட்டாளியை இன்னும் இறுதி செய்யவில்லை. அதுகுறித்து, இன்னும் பலருடன் பேசிக்கொண்டிருக்கிறோம்.கூட்டு என்பது, இன்றைய அவசர தேவைக்கானதல்ல. நாளைய வாய்ப்புகளுக்கானது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|