பதிவு செய்த நாள்
04 பிப்2021
21:36
புதுடில்லி:‘ஹீரோ மோட்டோகார்ப்’ நிறுவனம், ‘ஹார்லி டேவிட்சன்’ தயாரிப்புகளை வினியோகிப்பதற்காக, தனியாக ஒரு வணிகப் பிரிவை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் மேலும் தெரிவித்து உள்ளதாவது:அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் பைக்குகள் உள்ளிட்ட தயாரிப்புகளை, இந்தியாவில் விற்பதற்காக, ஹீரோ மோட்டோகார்ப் தனி வணிகப் பிரிவை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன், ‘கூப்பர், டுகாட்டி’ ஆகிய நிறுவனங்களில் பணியாற்றிய, ரவி அவலுார் தலைமையில், தனிப் பிரிவு செயல்படும்.
வரும், 18ம் தேதியிலிருந்து, ஹார்லி டேவிட்சன் பைக்குகள் முகவர்களுக்கு வழங்கப்படும். ஏற்கனவே இருக்கும், 11 முகவர்கள், நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவர்.இவர்கள் தவிர, புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் முகவர்களாலும் விற்பனை, உதிரிபாகங்கள், சேவை ஆகியவை இந்தியா முழுதும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பரில், ஹார்லி டேவிட்சன் நிறுவனம், இந்தியாவில் நேரடி வணிகத்தை நிறுத்தி, வெளியேறப் போவதாக அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக விற்பனை, சேவை உள்ளிட்டவை, ஹீரோ மோட்டோகார்ப் மூலம் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்திருந்தது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|