பதிவு செய்த நாள்
04 பிப்2021
21:45
புதுடில்லி:எந்தெந்த பொதுத் துறை நிறுவனங்களில், பங்கு விலக்கல் நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்த பட்டியல், இன்னும் சில வாரங்களில் வெளியிடப்படும் என, ‘நிடி ஆயோக்’ துணைத் தலைவர் ராஜிவ் குமார் கூறியுள்ளார்.
பட்ஜெட் அறிவிப்பின்போது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அரசின் வசம் இருக்கும் பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விலக்கல் குறித்தும் அறிவித்து இருந்தார். மேலும், நிடி ஆயோக் இது குறித்த பட்டியலை தயாரிக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.இதன் தொடர்ச்சியாக, நிடி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார், இன்னும் இரண்டொரு வாரங்களில் பங்கு விலக்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டிய நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்படும் என, தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:பட்டியல் தயாரிக்கும்பணிகள் ஏற்கனவே துவங்கி விட்டன. இன்னும் சில வாரங்களில், பட்டியல் வெளியாகிவிடும். ஏற்கனவே, பங்கு விலக்கல்குறித்து, ஐந்து வித தொகுப்பு பரிந்துரைகள் அரசுக்கு வழங்கப்பட்டுள்ளன.
வங்கி களின் வாராக் கடன் பிரச்னைகளை தீர்க்கும் வகையில், சொத்து மறுசீரமைப்பு நிறுவனம் மற்றும் சொத்து மேலாண்மை நிறுவனம் ஆகியவற்றை அமைப்பது மிகவும் இன்றியமையாத தேவையாகும். இல்லாவிட்டால், வாராக் கடன் பிரச்னையிலிருந்து வங்கிகள் மீள, அவற்றுக்கு நீண்ட காலம் பிடிக்கும் அல்லது அதிக முதலீடு தேவைப்படும். நாட்டின் பொருளாதாரசெயல்பாட்டுக்கு, வரி செலுத்துவோரின் பங்களிப்பை, நான் அங்கீகரிக்கிறேன். ஆனாலும் கூட, கடினமான காலங்களில், நாம் அனைவரும் சற்று பொறுமை காக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|