பதிவு செய்த நாள்
04 பிப்2021
22:00
மும்பை:தொடர்ந்து, நான்காவது நாளாக நேற்றும் பங்குச் சந்தைகள் உயர்ந்தன.இதனால், மும்பை பங்குச் சந்தையின், ‘சென்செக்ஸ்’ பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு, 200 லட்சம் கோடி ரூபாயை தாண்டி, புதிய வரலாற்று உச்சத்தை தொட்டது.
புதன் கிழமையன்று சந்தை மதிப்பு, 198.43 லட்சம் கோடியாக இருந்த நிலையில், நேற்றைய வர்த்தகத்தின் முடிவில், 200.50 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது.நிறுவனங்களின், மூன்றாவது காலாண்டு முடிவுகள் லாபகரமாக அமைந்தது, தொடர்ச்சியான அன்னிய முதலீட்டாளர்கள் பங்கேற்பு ஆகியவை, சந்தை உயர உறுதுணையாக இருந்தன.
மேலும், ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தை அதிகரிக்காது என்ற எதிர்பார்ப்பு, உலக சந்தைகளின் போக்கு ஆகியவையும், சந்தை, புதிய உச்சத்தை தொட உதவின.நேற்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில், சென்செக்ஸ் இதுவரை இல்லாத புதிய உயரத்தை எட்டியது. 359 புள்ளிகள் அதிகரித்து, வர்த்தகத்தின் இறுதியில், 50687 புள்ளிகளில் நிலைபெற்றது.
தேசிய பங்குச் சந்தையின் நிப்டியும், 105 புள்ளிகள் அதிகரித்து, 14895 புள்ளிகளில் முடிவுற்றது. வ ங்கி பங்குகள் குறிப்பாக, பொதுத் துறை வங்கி பங்குகள் அதிகளவில் விற்பனை ஆனது மற்றும் நுகர்பொருட்கள் துறை பங்குகள் விலை அதிகரித்தது ஆகியவை, சந்தை, புதிய உயரத்தை தொட உதவின.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|