பதிவு செய்த நாள்
05 பிப்2021
20:58
புதுடில்லி:‘பேபால்’ நிறுவனம், இந்தியாவுக்குள் மேற்கொள்ளப்படும் அதன், ‘டிஜிட்டல்’ பணப் பட்டுவாடா சேவையை நிறுத்திக்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது.
வரும் ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து, இந்தியாவுக்குள் நடைபெறும் சேவை மட்டும் நிறுத்திக் கொள்ளப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது. இதற்குப் பதிலாக, இந்திய வணிகங்களின் வெளிநாட்டு விற்பனையில் கவனம் செலுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பேபால், பணப் பட்டுவாடா மேற்கொள்வதில் முன்னிலையில் இருக்கும் நிறுவனங்களில் ஒன்றாகும்.
இது குறித்து, இந்நிறுவனம் மேலும் தெரிவித்து உள்ளதாவது:இந்திய வணிகங்கள், எங்களுடைய உலகளவிலான, 35 கோடி வாடிக்கையாளர்களை எளிதில் அணுகி, அவற்றின் பன்னாட்டு விற்பனையை அதிகரித்துக் கொள்ள முடியும்.
கடந்த ஆண்டில் மட்டும், இந்தியாவில் உள்ள, 3.6 லட்சம் வணிகர்கள் மூலம், 10 ஆயிரத்து, 220 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள், பேபால் பணப் பரிவர்த்தனை மூலம் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு, தெரிவித்து உள்ளது. இந்தியாவில், ‘ஸ்விக்கி, புக் மை ஷோ டாட்காம்’ போன்ற பல நிறுவனங்களில், பணம் செலுத்துவதற்கான தளங்களில் ஒன்றாக பேபால் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|