பதிவு செய்த நாள்
06 பிப்2021
21:27
புதுடில்லி:ரிசர்வ் வங்கி, அதன் நிதிக் கொள்கை கூட்டத்தில், வட்டி விகிதத்தில் எந்த மாறுதலையும் செய்யாததை, ரியல் எஸ்டேட் துறையினர் வரவேற்றுள்ளனர்.
ரிசர்வ் வங்கி, வட்டியை அதிகரிக்காததால், வாடிக்கையாளர்களுக்கு, தொடர்ந்து குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இருப்பினும், கடந்த சில மாதங்களாக விற்பனை அதிகரித்து வரும் நிலையில், இம்முறையும் வட்டியை சற்று குறைத்து அறிவித்திருந்தால், தேவைகள் மேலும் அதிகரித்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இத்துறையை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளதாவது:கொரோனாவின் தாக்கத்தால் வீடுகள் விற்பனை, கடந்த ஜூன் காலாண்டில், பலத்த சரிவைக் கண்டது. இருப்பினும், பண்டிகை காலம், மற்றும் வீட்டுக்கடன் வட்டி, 7 சதவீதமாக குறைந்தது ஆகிய காரணங்களால், டிசம்பர் காலாண்டிலிருந்து விற்பனை ஓரளவுக்கு அதிகரிக்க துவங்கி உள்ளது.இந்நிலையில், பட்ஜெட்டில் பெரிய அளவிலான சலுகைகள் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தோம். ஆனால், அந்த அளவுக்கு இத்துறைக்கு சலுகைகள் அறிவிக்கப்படவில்லை.
இதையடுத்து, ரிசர்வ் வங்கி வட்டியை மேலும் குறைக்க கூடும் என நினைத்திருந்தோம். அதன் மூலமாவது தேவைகள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்த்தோம்.ஆனால், வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதே சமயம், வட்டியை உயர்த்தாமல் இருந்தது ஓரளவு ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது.இவ்வாறு தெரிவித்து உள்ளனர்.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|