இந்தியாவுக்குள் சேவை  நிறுத்துகிறது ‘பேபால்’ இந்தியாவுக்குள் சேவை நிறுத்துகிறது ‘பேபால்’ ...  வேகமாக வளர்ச்சி காணும் இந்திய இணைய பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி காணும் இந்திய இணைய பொருளாதாரம் ...
வர்த்தகம் » ரியல் எஸ்டேட்
வட்டியை அதிகரிக்காததால் வீடுகள் விற்பனை உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 பிப்
2021
21:27

புதுடில்லி:ரிசர்வ் வங்கி, அதன் நிதிக் கொள்கை கூட்டத்தில், வட்டி விகிதத்தில் எந்த மாறுதலையும் செய்யாததை, ரியல் எஸ்டேட் துறையினர் வரவேற்றுள்ளனர்.

ரிசர்வ் வங்கி, வட்டியை அதிகரிக்காததால், வாடிக்கையாளர்களுக்கு, தொடர்ந்து குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இருப்பினும், கடந்த சில மாதங்களாக விற்பனை அதிகரித்து வரும் நிலையில், இம்முறையும் வட்டியை சற்று குறைத்து அறிவித்திருந்தால், தேவைகள் மேலும் அதிகரித்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து இத்துறையை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளதாவது:கொரோனாவின் தாக்கத்தால் வீடுகள் விற்பனை, கடந்த ஜூன் காலாண்டில், பலத்த சரிவைக் கண்டது. இருப்பினும், பண்டிகை காலம், மற்றும் வீட்டுக்கடன் வட்டி, 7 சதவீதமாக குறைந்தது ஆகிய காரணங்களால், டிசம்பர் காலாண்டிலிருந்து விற்பனை ஓரளவுக்கு அதிகரிக்க துவங்கி உள்ளது.இந்நிலையில், பட்ஜெட்டில் பெரிய அளவிலான சலுகைகள் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தோம். ஆனால், அந்த அளவுக்கு இத்துறைக்கு சலுகைகள் அறிவிக்கப்படவில்லை.

இதையடுத்து, ரிசர்வ் வங்கி வட்டியை மேலும் குறைக்க கூடும் என நினைத்திருந்தோம். அதன் மூலமாவது தேவைகள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்த்தோம்.ஆனால், வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதே சமயம், வட்டியை உயர்த்தாமல் இருந்தது ஓரளவு ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது.இவ்வாறு தெரிவித்து உள்ளனர்.

Advertisement

மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)