பதிவு செய்த நாள்
07 பிப்2021
22:23
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, 2021ம் ஆண்டு மத்திய பட்ஜெட், பங்குச் சந்தையில் சாதகமாக பிரதிபலித்துள்ளது. பொதுவாக, வளர்ச்சிக்கும், முதலீட்டிற்கும் சாதகமான அம்சங்கள் பட்ஜெட்டில் இருப்பதாக கருதப்படுகிறது என்றாலும், தனிநபர் நிதி மீது தாக்கம் செலுத்தக் கூடிய அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், பட்ஜெட் தாக்கம் காரணமாக, முதலீடு உத்திகள் மற்றும் ஓய்வு கால திட்டத்தில் மாற்றம் செய்து கொள்ள வேண்டுமா என்பது பற்றி பார்க்கலாம்.
பங்கு முதலீடு:
பங்குச் சந்தை ஏறுமுகத்தில் இருக்கிறது. பொது முடக்கத்திற்கு பின், அமைப்பு சார்ந்த துறைகள் மீதான கவனம், அரசின் வளர்ச்சி ஆதரவு நடவடிக்கைகள் உள்ளிட்ட அம்சங்கள் சாதகமாக அமைந்துள்ளன. எனினும், முதலீட்டாளர்கள் தங்கள் எதிர்பார்ப்பை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
விற்பனை உத்தி:
சந்தையில் சிறிய கரெக் ஷன் ஏற்படும் போது, நல்ல பங்குகளை வாங்குவது நல்ல உத்தியாக இருக்கும்.பங்குகள், மியூச்சுவல் பண்ட் முதலீட்டில் லாபம் பார்த்தவர்கள், அவற்றில் ஒரு பகுதியை விற்று வெளியேறலாம். ஆனால், முதலீடு தொகுப்பில் சரியான விகிதத்தில் ஒதுக்கீடு அமைந்திருப்பது அவசியம்.
வட்டி விகிதம்:
குறைந்த வட்டி விகித போக்கு நிலவுகிறது. ஆனால், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ள அரசின் நிதி திரட்டும் நடவடிக்கைகள், வட்டி விகிதம் உயரும் நிலை ஏற்படலாம் என்பதை உணர்த்துகின்றன. பத்திரங்களில் முதலீடு செய்பவர்கள், நீண்ட கால நோக்கிலானவற்றை தவிர்த்து, குறுகிய காலம் கொண்டவற்றில் முதலீடு செய்யலாம்.
தங்கம் விலை:
உள்நாட்டில் கடந்த ஆறு மாதங்களில் தங்கம் விலை, 10 சதவீதம் குறைந்துள்ளது. சுங்க வரி குறைப்பு மேலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும், முதலீடு நோக்கில் தங்கம் ஈர்ப்புடையதாகவே இருக்கும். தங்க சேமிப்பு பத்திரம், தங்க இ.டி.எப்., அல்லது டிஜிட்டல் வடிவில் தங்கத்தில் முதலீடு செய்யலாம்.
நிதி இலக்குகள்:
பங்குச் சந்தை போக்கு ஏற்ற இறக்கமாக அமைந்திருந்தாலும், அதை அடிப்படையாக கொண்டு மட்டுமே முதலீடு முடிவுகளை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடு தொகுப்பின் இடர் தன்மை மற்றும் பலன்களை ஆய்வு செய்து, தேவையான மாற்றங்களின் அடிப்படையில் உத்தியை அமைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|