பதிவு செய்த நாள்
07 பிப்2021
22:25
தேசிய பென்ஷன் திட்டமான, என்.பி.எஸ்.,சி-ல் இணைவது மற்றும் வெளியேறுவதை மேலும் எளிதாக்கும் வகையில், இணையம் மூலமான கே.ஒய்.சி., வசதியை, பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.
தேசிய பென்ஷன் திட்டம் மற்றும் அடல் பென்ஷன் திட்டம் உள்ளிட்டவற்றை, தேசிய பென்ஷன் நிதி ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையம் நிர்வகித்து வருகிறது.தற்போது, ஆதார் அடிப்படையிலான இ- – கே.ஒய்.சி., மூலம் இந்த திட்டத்தில் உடனடியாக இணையும் வசதியை ஆணையம் அறிமுகம் செய்து உள்ளது. திட்டத்தில் இருந்து வெளியேறவும் இதே வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதற்கு முன், இந்த செயல்முறையை உறுப்பினர்கள் நேரடியாக நிறைவேற்ற வேண்டும். இனி, இணையம் மூலமே இது சாத்தியமாகும். ஆதார் அடிப்படையிலான தகவல்கள் அளித்து அல்லது பான் கார்டு மற்றும் கே.ஒய்.சி., தகவல்கள் அளித்து இ- – என்.பி.எஸ்., திட்டத்தில் சேரலாம்.பென்ஷன் ஆணையம், உறுப்பினர்களுக்கான ‘டிஜிட்டல்’ வசதியை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக புதிய வசதி அமைகிறது. அடல் பென்ஷன் திட்டத்திற்கும் இது பொருந்தும். இதன் மூலம் திட்டத்தில் இணைவது மற்றும் வெளியேறுவது எளிதாகி இருக்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|